சென்னை, பிப்.12- அதிமுக மோடியின் வாரிசாக மாறி மாநில உரிமைகளை காவு கொடுக்கும் வகையில் ஒரேநாடு, ஒரே தேர்தல் என்று பேசுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடியுள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், சென்னை மாநகராட்சி 98ஆவது வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆ.பிரியதர் ஷிணி போட்டியிடுகிறார். அவருக்கு சனிக் கிழமையன்று (பிப்.12) சாமிதாஸ்புரம் பகுதி யில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் ஏ. அறிவழகன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசி ரியர்.க.அன்பழகன் உருவப்படத்திற்கு கே. பாலகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத் தினார்.
பின்னர் வாக்கு சேகரிப்பின் போது கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது: நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத் தான வெற்றி பெற்றது. 8 மாத கால திமுக ஆட்சியை நேரடியாக மக்கள் பார்த்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் திமுக தலைமையிலான கூட்டணி மகத் தான வெற்றி பெறும். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத்தவில்லை. உள்ளாட்சி அமைப்புகளை முடமாக்கி, அனைத்து பணி களையும் அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்தனர். உள்ளாட்சி நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாக, கொள்ளைக் கூடமாக மாற்றி சாதனை படைத்தனர். இதனால் நகராட்சி நிர்வாகம் சீர்குலைந்தது. குடிநீருக்கு கூட மக்கள் அவதிப்பட்டனர். சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாக கணக்கெழுதி கொள்ளை யடித்தனர். இதனால் சாலைகள் எல்லாம் பல்லாங்குழிகளாக காட்சியளிக்கின்றன. இதற்கு முடிவுகட்ட நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் வாக்குக் கேட்பதற்கு அதிமுகவிற்கு தார்மீக உரிமை கிடையாது. பாஜக-அதிமுக இடையே அரசியல் ரீதியாக கூட்டணி இல்லை என்பதுபோல கபட நாடகம் நடத்துகின்றனர். மதச்சார் பின்மையை காவு கொடுத்து, மாநிலங்களின் நிதி ஆதாரத்தை பறித்து, வெள்ள நிவார ணம் கூட கொடுக்காத ஆட்சியாக ஒன்றிய அரசு உள்ளது. இவர்களை மக்கள் புறக் கணிக்க வேண்டும்
சென்னை மாநகரட்சியில் அதிமுக அணிக்கு இடமே இல்லை என்கிற அளவில் திமுக அணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் தர வேண்டும். மக்கள் நலன் காக்க, இணக்க மாகச் செயல்பட 98ஆவது வட்டத்தில் போட்டி யிடும் இளம்வேட்பாளர் ஆ.பிரியதர்ஷி ணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார். பிரச்சாரத்தினிடையே செய்தியாளர்க ளின் கேள்விகளுக்கு பதிலளித்த கே.பால கிருஷ்ணன், “அண்ணா, எம்ஜிஆர் வழிவந்த வர்கள் என்ற நிலை மாறி அதிமுக தலை வர்கள், மோடியின் வாரிசாக மாறி ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என பாஜகவின் கொள்கையை பேசுகிறார் கள். ஒரேநாடு ஒரே தேர்தல் என்பது இந்தி யாவில் நடைமுறைக்கு சாத்தியமே இல்லை.
நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தும் போது எல்லா மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தும் சூழல் வராது. மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி கவிழ்கிற, கலைகிற நிலை ஏற்படும். அங்கெல்லாம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலே இருக் காது என்பது எப்படி மக்களாட்சியாகும். ஒருகாலத்தில் ஒரே தேர்தல் முறை இருந்தது. பல மாநிலங்களில் மாறுபட்ட கூட்டணி ஆட்சி கள் அமைக்கிறது. எனவே, ஒரேநாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லை.” என்றார். “மோடி அரசு எல்லோருடைய தொலை பேசியையும் ஒட்டுக் கேட்கிறது. மோடி ஆட்சிக்கு அவரது கட்சித் தலைவர்களா லேயே ஆபத்து உள்ளது. இதனால் பெகாசஸ் போன்றவற்றை பயன்படுத்தி பாஜக அமைச்சர்கள், தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்கிறது. ஒட்டுக்கேட்கும் அதிகாரம் பாஜகவிடம் உள்ள போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்போனை வேறு யாரால் ஒட்டுக் கேட்க முடியும்? ஆகவே அண்ணாமலை மோடி மீதுதான் கோபப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டுவதற்கு வழியே இல்லை” என்றும் அவர் கூறினார்.
“இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவரவர் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. கர்நாடகாவில் சீருடை அணிய எவரும் மறுக்கவில்லை. சீருடை அணிவதோடு, முகத்தில் கட்டுகிற ஹிஜாப் என்ற துணியை அணிகிறார்கள். சீக்கியர் ஒருவர் டர்பன் கட்டிக் கொண்டு செல்வதை அகற்றச் சொல்ல முடியாது; கூடாது. அதுபோன்றதுதான் ஹிஜாப். இஸ்லாமிய பெண்களின் கல்வியை பறிப்ப தற்கான முயற்சியாக ஹிஜாப் பிரச்சனை எழுப்பப்படுகிறது” என்றும் அவர் தெரி வித்தார். இந்த வாக்குச் சேகரிப்பு நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.அறிவழகன், சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் அன்பழ கன், திமுக வட்டச் செயலாளர்கள் முனுசாமி தாஸ், துரை, பாஸ்கர் மற்றும் ஐயப்பன், பாக்கியராஜ் (காங்.), டில்லிபாபு (மதிமுக), அப்பனு, செந்தில் (விசிக), அப்துல் ராகுமான் (மமக) உள்ளிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.