வேலூர், நவ.20 - தென் மண்டல பல்கலைக்கழ கங்களுக்கு இடையேயான ஆடவர் டென்னிஸ் போட்டி வேலூரில் ஞாயிறன்று(நவ.20) தொடங்கியது. இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங் கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங் களிலிருந்து 64 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டி வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள போட்டிக்கு தகுதி பெறு வார்கள். விஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் போட்டியை துவக்கி வைத்தார். இணை துணை வேந்தர் பார்த்தா சாரதி மாலிக், பதி வாளர் டி.ெஜயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக உடற்கல்வி இயக் குநர் தியாக சந்தன் வரவேற்றார். மங்கையர் கரசி அருண் முடிவில் நன்றியுரையாற்றினார்.