தென் கொரியாவின் புதிய ஜனாபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 9 ஆம் தேதி நடை பெறவுள்ளது. 14 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆளும் ஜனநாயகக் கட்சியின் லு ஜே மியுங் மற்றும் மக்கள் அதிகாரக் கட்சியின் யூன் சுக் இயோல் ஆகிய இருவருக்கும் இடையில்தான் போட்டி என்று எதிர்பார்க்கப் படுகிறது. கொரோனா பெருந்தொற்றை சரியாகக் கையாண் டதால் ஆளும்கட்சி வேட்பாளருக்கு நிலைமை சாதகமாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி ஈரானின் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறி இந்த அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீனாவுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டில் அன்றாடம் 24 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தியை ஈரான் மேற்கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 21 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பணியிட சூழல் ஆகிய விஷயங்களில் உள்ள பிரச்சனைக ளைச் சரி செய்யக் கோரி பிரிட்டனைச் சேர்ந்த ஆயி ரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வூதியத்தில் கடு மையான வெட்டு மேற்கொள்ளப்பட்டிருப்பது ஊழியர் கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேம்பிரிட்ஜ், லீட்ஸ் மற்றும் எடின்பர்க் உள்ளிட்ட 44 பல் கலைக்கழகங்களின் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.