tamilnadu

img

டெக்ஸாஸில் சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு போராட்டத்தின் புதிய குரல்

டெக்ஸாஸில் சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு போராட்டத்தின் புதிய குரல் 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநி லத்தில் சான் அண்டோனியோ வில் நடைபெற்ற சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் டஜன் கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.  முதலாளித்துவத்தின் கீழ் பெண் விடுதலை இல்லை  கட்சித் தலைவர் சின்தியா சூரஸ் மாநாட்டைத் துவக்கி வைத்து பேசுகை யில், “முதலாளித்துவத்தின் கீழ் பெண் விடுதலை இல்லை. கருச்சிதைவு உரிமை, குழந்தை பராமரிப்பு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை போன்ற நாம் போராடிவரும் ஒவ்வொரு சீர்திருத்தமும் முதலாளித்துவ த்தில் மறுக்கப்படும்” என்று தெரிவித்தார்.  டெக்ஸாஸில் வளரும் சோசலிஸ்ட் இயக்கம்  கட்சியின் செயல்பாட்டாளர் டெஸ்டினி பேனா, “டெக்ஸாஸ் மாநிலத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர். டெக்ஸாஸில் அனைவரும் சோசலிசம் குறித்து பயப்படுகிறார்கள். சோசலிசம் என்பது அசிங்கமான வார்த்தை என்ற சொல்லாடல்கள் உள்ளன. ஆனால் சோசலிசத்திற்கான இயக்கம் டெக்ஸாஸில் வளரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.  கருச்சிதைவு உரிமைக்கான போராட்டம்   2024 அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் கலந்துகொண்ட கிளாடியா டெ லா குரூஸ் மாநாட்டில் பங்கேற்று, “நாம் போராடினால் நாம் வெற்றி பெறுவோம். போராடாவிட்டால் நாம் தோல்வியுற்று விடுவோம்.  வரலாற்று ரீதியாக நாம் பெற்ற ஒவ்வொரு ஆதாயத்தையும் பறிக்க முயற்சிக்கிறார்கள்” என்று பேசினார்.  கருச்சிதைவை குற்றமாக்கியதால் டெக்ஸாஸில் பல பெண்களுக்கு உயிருக்கு ஆபத்தான செப்சிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களின் இறப்பு விகிதம் உயர்ந்துள்ளது. கருச்சிதைவு மறுக்கப்பட்ட பெண்களின் 72% பேர் வறுமையில் உள்ளனர்.  தொழிலாளர் உரிமைகளுக்கு எதிரான சட்டங்கள்  பழமைவாத கட்சி ஆளும் 26 மாநி லங்களில் டெக்ஸாஸும் ஒன்று. இங்கே சங்க உறுப்பினராக ஆகாமலேயே சங்கம் பெரும் ஆதாயங்களைத் தொழிலாளிகள் பெற முடியும் என்ற சட்டம் உள்ளது. இது தொழிற்சங்க இயக்கத்திற்கு எதிரானது. சம வேலைக்கு சம ஊதியம் பெண் களுக்குக் கிடைப்பதில்லை.