tamilnadu

img

திமுக ஆட்சியில்தான் சமூக நீதி நிலைநாட்டப்படுகிறது: கே.பாலகிருஷ்ணன்

கடலூர்,பிப்.17- திமுக ஆட்சியில் தான் சமூக நீதி நிலை நாட்டப்பட்டு வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கடலூர் மாநகராட்சி 21ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் தேவி ஆனந்த், 20-வது வார்டில் திமுக வேட்பாளர் சுந்தரி ராஜா, 36 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் மாலதி சுப்பராயனை ஆகியோரை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது உரை யாற்றிய கே. பாலகிருஷ்ணன்,“ கடந்த  10 ஆண்டுகாலமாக உள்ளாட்சி தேர் தலை நடத்தாமல் அதிகாரிகளை வைத் துக்கொண்டு கொள்ளையடித்தது முந்தைய அதிமுக ஆட்சி. அதனால்  உள்ளாட்சி நிர்வாகம் சீர் கெட்டுள்ளது”  என்றார். கூட்டணி ஒற்றுமை! திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதத் தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி தீருவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார். அதன்படி, நடத்தியும் காட்டியுள்ளார் என்றும் கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒருங்கிணைத்து செல்வதால் கடந்த 4 ஆண்டுகளாக கொள்கை கூட்டணியாக, லட்சிய கூட்டணியாக தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.

 உள்ளாட்சியில் நல்லாட்சி அமைத்தால்தான் நகராட்சி நிர்வாகம் சீர்படும். நகர்ப்புறங்களில் 12,400 கவுன்சிலர்கள் வெற்றி பெற  உள்ளனர். இவர்களில் சரிபாதி பெண்க ளுக்கு வாய்ப்பு வழங்கப்பட் டுள்ளது. தொட்டால் தீட்டு, பார்த்தால்  பாவம் என்று தாழ்த்தப்பட்ட மக்களை அடித்தட்டு ஏழை மக்களை நடத்திவந்தனர். திமுக ஆட்சியில் தான் சமூகநீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது எனவும் கே. பாலகிருஷ் ணன் கூறினார். சென்னையில் தாழ்த்தப்பட்ட சகோதரி மேயராக, சென்னையின் மாநகரின் தந்தையாக பதவி ஏற்க உள்ளார். வீட்டை நிர்வகித்து வந்த  பெண்களுக்கு தற்போது நாட்டை  நிர்வகிக்க வாய்ப்பு வழங்கப்பட் டுள்ளது. அதேபோல் தமிழக முழுவதும் பட்டியலின, பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகார பீடத்தில் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திய அதிமுக இந்த  தேர்தலில் போட்டியிட என்ன தகுதி யிருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த பிரச்சாரத்தில் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், செயற் குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், ராஜேஷ் கண்ணன், எம். மருதவா ணன், பி. கருப்பையன், நகர செயலா ளர் ஆர். அமர்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.