tamilnadu

img

திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் சீத்தாராம் யெச்சூரி பிரச்சாரம்

கோவில்பட்டி, ஏப்.9-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவில்பட்டியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் நகர் செயலாளர் ஆர்.முருகன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் எல்.பி.ஜோதிபாசு முன்னிலை வகித்தார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, எஸ்.ஏ.பெருமாள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பி.கீதாஜீவன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ்,சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.அழகுமுத்துபாண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சீனிவாசன், விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கதிரேசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் காஜா மீரான், ஐ.ஜே.கே சார்பில் பாலமுருகன், மனிதநேய மக்கள் கட்சியின் போத்திராஜ்,சமத்துவ மக்கள் கழகத்தின் அற்புதராஜ், பார்வர்டு பிளாக் ஆர்.முருகேசபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் முத்துவேல்ராசா, ஆதித் தமிழர் பேரவையின் செண்பகராஜ், ஆதித் தமிழர் கட்சி ஏ.ஜெ.ரமேஷ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். 

;