சமஷ்டிபூர் (பீகார்), மார்ச் 7- ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங் களை தீவிரப்படுத்தி ஒன்றிய அரசை அகற்றுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். கட்சியின் பீகார் மாநில மாநாட்டையொட்டி சமஷ்டிபூர் பட்டேல் மைதானத்தில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய யெச்சூரி, “ஒன்றிய, மாநில அரசின் மக்கள் விரோத, தேசவிரோத, அரசி யலமைப்புச் சட்டத்துக்கு எதி ரான கொள்கைகளுக்கு எதி ராக மக்களைத் திரட்டி போராட்டத்தை தீவிரப்படுத்து வோம். மக்கள் போராட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார். பொதுக்கூட்டத்தில் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஹன்னன் முல்லா, மாநிலச் செயலாளர் அவதேஷ் குமார், மத்தியக் குழு உறுப் பினர் அருண்குமார், சட்டமன்ற உறுப்பினர் அஜய்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக கட்சியின் சமஷ்டிபூர் மாவட்டக்குழு அலு வலகத்தை சீத்தாராம் யெச்சூரி, ஹன்னன் முல்லா ஆகியோர் திறந்துவைத்தனர். பொதுக்கூட்டத்தில் ஆயி ரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநில மாநாட்டை யொட்டி நடைபெற்ற பேரணியில் ஏராளமான பெண்கள் செங்கொடி ஏந்தி சமஷ்டிபூர் நகரில் அணி வகுத்தனர்.