tamilnadu

img

சிங்கார நல்லூரான சிங்காநல்லூர் ஏரி

ஒருகாலத்தில் சிங்காநல்லூர் ஏரி கோவை நகரில் குப்பை  களைக் கொண்டுபோய்க் கொட்டும் இடமாக  இருந்தது. இங்கு குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபான பாட்டில்கள் நிறைந்து துர்நாற்றம் அடித்துக்கொண்டிருந்தது. 288 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஏரி இன்று  பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், பலதரப்பட்ட உயிரினங்கள் நிறைந்த பல்லுயிர்ச் செழுமை மிகுந்த இடமாகத் திகழ்கிறது. இப்போது சூழல் காக்கும் நகரத்தின் சொர்க்க பூமி இது.

க்யூப் (CUBE)

இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு கூட்டமைப்பு செயல்படு கிறது. பல்லுயிர்ப் பரவலை நிலைநிறுத்த நீர்நிலைகளைப் பாதுகாக்கும் இயற்கையை நேசிக்கும் மனிதர்களின் ஒன்றுபட்ட  முயற்சியின் பலனே இது. நகர்ப்புற உயிர்ப் பன்மைத்தன்மை மற்றும் பாதுகாப்பு மையம் (Centre for Urban Biodiversity Conservation&Education CUBE) என்ற சூழல் அமைப்பே இந்த ஏரியை மீட்டெடுத்தது.

பல்லுயிர்களின் கருவூலம்

2003 முதல் இந்த ஏரியில் வாழும் பலதரப்பட்ட உயிரி னங்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஜோசப் என்ற சூழலை நேசிக்கும் ஆய்வாளரே இதற்கு தலைமையேற்று செயல்பட்டார். 2016ல் இவர் அடங்கிய குழு ஏரியை சர்வே செய்தது. இதில் 720 உயிரினங்கள் இங்கு வாழ்வது கண்டறி யப்பட்டது. இவற்றில் 160 வகை பறவைகள், 200 வகை மருத்துவத் தாவரங்கள் உட்பட 396 வகை செடிகள், 62 வகை  வண்ணத்துப் பூச்சிகள், 22 வகை பாலூட்டிகள் அடங்கும்.

தூய்மைப்பணிகள்

அரிதாகக் காணப்படும் 10 பறவையினங்கள் இவற்றில் அடங்கும். இந்த ஆய்வின் அடிப்படையில் ஏரியை காக்க க்யூப் செயலில் இறங்கியது. கோவை மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் 2016ல் தடாகத்தை மீட்கும் பணிகள் தொடங்கின. மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் குப்பைகள் அணைத்தும் அகற்றப்பட்டன. மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப் பட்டன. சுற்றிலும் கரை கட்டப்பட்டது.

அடர்ந்த காடு 

பல்வேறு காலகட்டங்களில் பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான நாட்டு மரங்கள் நடப்பட்டன. இன்று இந்த இடம்  எழில்கொஞ்சும் பூங்கா. இப்போது ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. மாணவர்கள், பொது மக்களுக்கு உயிர்ப் பன்மைத்தன்மை தரும் மகத்தான நன்மைகளின் நேர் சாட்சியாக இப்போது சிங்காநல்லூர் ஏரி உள்ளது. நேரில் பார்த்து இதைப் புரிந்துகொள்ள இங்கு வகுப்புகளும் நடைபெறுகின்றன.

இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுக்கும் வகுப்புகள்

மாநகராட்சி நிர்வாகம் ஏரியில் மீன் பிடிப்பதை தடை செய்துள்லது என்றாலும் இப்போதும் திருட்டுத்தனமாக மீன் பிடித்தல் தொடர்கிறது. இது ஏரியில் வாழும் உயிரினங்க களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. வருகை புரிவோருக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர்களும் இங்கு இருக்கின்றனர். ஒவ்வொருநாளும் 30 மாணவர்களேனும் இயற்கையின் எழிலை கண்டு கேட்டு அனுபவித்து உணர்ந்து புரிந்துகொள்ள இங்கு வருகின்றனர் என்று க்யூப் செயலாளரும், ஆய்வாளரு மான வின்ன்னி ஆர் பீட்டர் கூறுகிறார்.