tamilnadu

img

விநோதினி - டாக்டர் எல். கைலாசம்

கல்கி அவர்கள், சிவகாமியின் சபதத்தில், காஞ்சிக்கோட்டையைப் பலப்படுத்தி, சாளுக்கியமன்னர் புலிகேசியின் முற்றுகையை எப்படி பல்லவச் சக்கரவர்த்தி மகேந்திரவர்மர் எதிர்கொள்கிறார் என்பதை மிகவும் விளக்கமாக சொல்லியிருப்பார்கள். மகாராஜா மகேந்திரவர்மர் காஞ்சிக்கோட்டையை ஏன் பலப்படுத்தினார் என்பதற்கான காரணம் இந்தப் புதினத்தில் ஆராயப்பட்டுள்ளது.  பல மர்மங்கள் சூழ்ந்த வேகவதி நதிக்கரையில் அமைந்திருக்கும் விஷ்ணுகடிகையை தணிக்கை செய்யவந்த விநோதினி எனும் அரசகுல இளம்பெண்ணை கொலை செய்து வேகவதியில் எறிகிறார்கள் இந்தக் கொடிய சதியின் பின்னால் இருக்கும் பல்லவ நாட்டையை அழிக்கும் பணச்சலவை போன்ற கொடிய குற்றங்களை மகேந்திரரும், அதிகரணப்போசகரான விக்கிரமனும், முறியடித்து பல்லவநாட்டை எவ்விதம் காக்கிறார்கள் என்பதை சொல்வதுதான் ‘விநோதினி’ எனும் இந்த சரித்திரப் புதினம்.  புலிகள் நிறைந்திருக்கும் அகழியிலும், விஷக்குளத்திலும், இனிப்பாகப் பேசும் கொலைகாரனிடமும், தெய்விகத்தையும், நாட்டுப்பற்றையும் சொல்லிப் பல்லவநாட்டின் ‘வடக்குத்தூண்’ என்று ஏமாற்றும் கொலைகாரனிடமும் சிக்கிக்கொண்ட விநோதினியும், விக்கிரமனும், அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமையினை எவ்விதம் செய்கிறார்கள் என்பதை சொல்லும் இந்தப்புதினத்தைப் படிப்பவர்களுக்கு தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் அபாயங்களை சமாளிக்க உதவும்.