tamilnadu

img

மகளிர் நலனில் சித்த மருத்துவம்: சிறப்பு கண்காட்சி

தூத்துக்குடி, ஜூன் 23- இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவத்துறை நடத்திய மகளிர் நலனில் மருத்துவம் என்ற தலைப்பிலான சிறப்பு சித்த மருத்துவக் கருத்தரங்கம், சித்த மருத்து வக் கண்காட்சி காயல்பட்டணம் வாவு வஜூஹா வனிதையர் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் வாசுகி தலை மை வகித்தார். சித்த மருத்துவர்கள் ரதி செல்வம் (ஸ்ரீவைகுண்டம்), அபிநயா (கோவில் பட்டி), ஜன்னத்ஷெரீப் (எட்டயபுரம்), முருக பொற்செல்வி (காயல்பட்டணம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் மாவட்ட சித்த மருத்துவர் ராஜ செல்வி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:  இன்றுள்ள கணினி இன்டர்நெட் உலகில் நாகரீகம் என்ற பெயரில் நாம் அனைவரும் நமது முன்னோர்கள் சொன்ன பாரம்பரிய பழக்க வழக்கங்களை எல்லாம் மறந்துவிட்டோம்.

எப் படி வாழவேண்டும் நலமாக வாழ்வதற்கான உணவு பழக்கவழக்கம் என்ன? ஆரோக்கி யத்தை பாதுகாப்பது எப்படி? என எந்த தகவல் வேண்டுமென்றாலும் இன்டர்நெட்டில் போய் தான் தேடிப் பார்க்கிறோம்.  உளுந்தகஞ்சி, கம்பங்கூழ், பதநீர், கருப்பட்டி என இயற்கை உணவுகளை உண்டு வந்த நாம் இன்று நாகரீகம் பேஷன் என்று சொல்லிக்கொண்டு பீஸா,பர்கர், பானிபூரி என ஏதேதோ பெயர் தெரியாத உணவுகளை எல்லாம் உண்டு வருகிறோம்.நோயின்றி நல மாக நீண்ட காலம் வாழவேண்டுமெனில் மீண்டும் இயற்கையைத்தேடி என்ற ரீதியில் இயற்கையான சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை மாணவ மாணவி யர்களான நீங்கள் தான் சமூகத்தில் உள்ள வர்களுக்கு எடுத்துச்சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்திடவேண்டும் என்றார். அதனைத்தொடர்ந்து சித்த மருத்துவர் ரதிசெல்வம், வளர் இளம்பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவர் ஜன்னத்ஷெரீப் மக ளிருக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், சினைப் பை நீர்க்கட்டி, இரத்தசோகை வராமல் தடுப்பது குறித்தும் மருத்துவர் அபிநயா பாரம்பரிய உண வின் முக்கியத்துவம், மருத்துவ குணம்மிக்க அரிசி வகைகள் குறித்தும், மருத்துவர் முருக பொற்செல்வி மகளிர் உடல் நலம், சித்த மருத்து வத்தில் பயன்படும் மலர்கள், அதன் பயன் கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். முன்னதாக சித்த மருத்துவ மூலிகைகளின் பயன்கள் குறித்து சிறப்பு கண்காட்சி மூல மாக பேராசிரியர்கள்,மாணவியர்களுக்கு விரி வாக எடுத்துக்கூறப்பட்டது. இதில் பேராசிரி யைகள், நாட்டு நலப்பணித் திட்ட அலு வலர்கள், மாணவியர்கள், கல்லூரி பணியா ளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் ஒய்ஆர்சிஏ அலுவலர் ராஜலெட்சுமி நன்றி கூறினார்.