tamilnadu

img

தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் - பாஜக சார்பாக நீட் ஆதரவு இயக்கம் நடத்த எஸ்எப்ஐ எதிர்ப்பு

திண்டுக்கல், மார்ச்.3- திண்டுக்கல் சீலப்பாடியில் அமைந்துள்ள வித்யா பார்த்தி  பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முற்றும் பாஜக சார்பாக நீட் ஆதரவு இயக் கம் என்ற பெயரில் மார்ச் 5ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கு எஸ்.எப்.ஐ. எதிர்ப்பு தெரிவித்துள் ளது.  தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து தமிழக மக்கள், மாண வர்களின் கருத்துக்களை கேட்ட றிந்து நீட் தேர்விலிருந்து தமிழ கத்திற்கு விலக்கு கோரி வரு கிறது. நீட் எதிர்ப்பு மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றியும் உள்ளது.  இந்நிலையில், திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள வித்யா பார்த்தி பள்ளியில் நீட் ஆதரவு இயக்கம் தொடர்பாக ஆய்வுக் கூட்டத்திற்கு கல்வித்துறை அனு மதி வழங்கக் கூடாது. இந்த  ஆய்வுக் கூட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முன்வரவேண்டும் என்று வலி யுறுத்தி வியாழனன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் மனுக் கொடுக்கப்பட்டது. இதில், மாவட்டத் தலைவர் செல்வமுருகன், மாவட்டச் செய லாளர் முகேஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, நகரத் தலைவர் கார்த்தி ஆகியோர் மனுக் கொடுத்தனர்.