கிருஷ்ணகிரி, ஜூன் 19- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட காவல் துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த குறவரின பெண்கள் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அவர்கள் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில், குறவரின பெண்களிடம் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவ லர் ராஜேஸ்வரி, காவல் துறை டி.எஸ்.பி தமிழரசி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மருத்துவ மனைக்கு சென்று விசா ரணை நடத்தி எழுத்துப் பூர்வமாக அறிக்கை பெற்றனர். அப்போது, தங்க ளுக்கு நடந்த கொடுமை களை அந்தப் பெண்கள் தெரிவித்தனர். முன்னதாக, இந்த விசாரணையின்போது உடனிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பழங்குடியின சங்கத் தலை வர்களை காவல்துறை அதிகாரிகள் வெளியேற்ற முயற்சித்தனர். இதனால், சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மகாலிங்கம், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தமிழ் நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய லாளர் ஏ.வி.சண்முகம், மாநிலப் பொருளாளர் வி.வேலு, விவசாயத் தொழி லாளர் சங்கத் தலைவர்கள் லெனின், ராமமூர்த்தி, வழக்கறிஞர்கள் இளவரசு, முரளி, நளினா, தாமு, மாதர் சங்கத் தலைவர்கள் ஆஞ் சலா மேரி ஆகியோர் உட னிருக்க காவல்துறையினர் அனுமதித்தனர்.