சென்னை,மார்ச் 8- ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யக் கோரி தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த இருமனுக்களும், தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன் றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள தாகவும், அந்த வழக்கு நாளை விசார ணைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டது.இதையடுத்து, இந்த வழக்கு களின் விசாரணையை இரண்டு வாரங் களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.