tamilnadu

img

செப்.20 டெல்டா மாவட்டங்களில் தொடர் முழக்கப் போராட்டம்

தஞ்சாவூர், செப்.8- தஞ்சாவூரில் இக்கூட்டியக்கத் தின் கலந்தாலோசனைக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் தெரிவித்ததாவது: காவிரியில் தண்ணீர் வராத நிலையில், டெல்டா மாவட்டங் களின் நிலைமைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட் டது. காவிரியில் தண்ணீர் வராத தால் ஏற்கனவே குறுவை சாகுபடி யில் பல லட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன. இதனால் விவசாயிகள் கை முதல் இழந்து தவித்து வருகின்றனர். இத்தகைய நிலையில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வருமா வராதா என்கிற மிகப்பெரிய குழப்பத்தில் விவசாயிகள் உள்ள னர். இதனால் சம்பா சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதற்கு விவசாயிகள் தயங்குகின்றனர். சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து விவசாயிகளுக்கு தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்!
தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு கடிதம், மத்திய நீர்வளத் துறை  அமைச்சரை நேரடியாக சந்தித்து வற்புறுத்தியது, காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகியது எனப் படிப்படியாக முயற்சித்து, தண்ணீர் கிடைக் காத நிலையில் இறுதியாக உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ள்ளது. இந்த வழக்கை உச்ச நீதி மன்றம் அவசர வழக்காக விசாரிக்காமல், செப்டம்பர் 21 ஆம்  தேதிக்கு விசாரணையை ஒத்தி  வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. இன்னும் 15 நாள் கழித்துத்தான் இந்த வழக்கு விசா ரிக்கப்படும் என்றால், தண்ணீர்  எப்போது வரும் என்கிற கேள்வி  எழுகிறது. எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக்கொண்டு உடனடியாக விசாரிக்க வேண்டும். குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட அனைத்து விவ சாயிகளுக்கும் ஏக்கருக்கு தலா ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் தமிழ கத்துக்கு மாத வாரியாக தண்ணீர் வழங்குவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை தமிழகத்துக் குரிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்தால், அம்மாநிலத்தில் உள்ள அணைகளைக் காவிரி மேலாண்மை ஆணையம் தன்னு டைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி தஞ்சாவூர், நாகை, திரு வாரூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட் டை ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 20 அன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. இது முதல் கட்ட போராட் டம். செப்டம்பர் 21 ஆம் தேதி  உச்ச நீதிமன்றத்தின் அணுகு முறையைப் பொருத்து, அடுத்த கட்டப் போராட்டத்தை தீவிரமாக நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர்கள் சாமி.நடராஜன், பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  காவிரி டெல்டா பாசன தாரர்கள் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநில துணைச் செயலாளர் பாலசிங்கம், மக்கள் அதிகாரம் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்கம்  கோ.திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்கம் சு.பழநி ராஜன், காவிரி டெல்டா விவசாயி கள் சங்கம் ஏ.கே.ரவிச்சந்திரன், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் அன்பழகன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், தமிழக விவ சாயிகள் சங்கம் கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் வீர.மோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார் உட்பட 11-க்கும் மேற்பட்ட விவ சாய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  முன்னதாக, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன் வரவேற் றார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.பாஸ்கர் நன்றி கூறினார்.