சென்னை, ஜன. 16- இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சில ஆண்டுகளாக அனைத்து வங்கிக் கிளை களிலும் பெண் ஊழியர்களுக்கு தனி கழிப் ்பறை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற முக்கிய பிரச்சனை மற்றும் மூன்று கோரிக்கை களை வலியுறுத்தி போராடி வருகிறது. வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மகளிர் துணைக்குழு சார்பில் இந்த பிரச்சி னைகள் குறித்து ஊழியர்கள், பொதுமக்கள் மத்தியில் விரிவான பிரச்சாரம் செய்யப் ்பட்டது. மேலும், வங்கி ஊழியர் சம்மேள னத்தின் தமிழ்நாடு பிரிவு, வங்கி நிர்வாகங் ்களை வலியுறுத்தி 2016ஆம் ஆண்டுஜூன் 25ஆம் தேதி சென்னையில் ஒரு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண் ஊழியர்கள்கலந்து கொண்டனர். அதேபோல் நாட்டின் பல பகுதிகளிலும் இத்த கைய தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. இந்த போராட்டங்கள் வங்கி ஊழிய ர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியது. மேலும் பெண் ஊழியர்களுக்கான தனி கழிப்பறை தொடர்பாக அனைத்து பொதுத் ்துறை வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வங்கி ஊழியர்கள் சம்மேளனம் விவரங்க ளைக் கோரியது. சேகரிக்கப்பட்ட தகவல்களில், சில பெருநகரக் கிளைகளில் கூட பெண் ஊழியர்களுக்கென தனி கழிப் பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சி யளிக்கும் தகவல் வெளியானது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் 17, 18 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பெண் வங்கி ஊழியர்களின் 3ஆவது தேசிய மாநாட்டி லும், திருவனந்தபுரத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 28 முதல் 31 வரை நடைபெற்ற வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 10ஆவது மாநாட்டிலும் இந்தக் கோரிக்கைகள் எழுப்பப் ்பட்டன. எந்தத் தளர்வும் இல்லாமல், இந்த பிரச்சினைகள் அனைத்து தளங்களிலும் பிரச்சாரம் செய்யப்பட்டன. வங்கி ஊழியர் சம்மேளனத்தின் உறுப்பு சங்கங்கள் அந்தந்த நிர்வாகங்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்த கோரிக்கை வலியுறுத் ்தப்பட்டது. இப்போது கனரா வங்கி அனைத்து கிளைகள், அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பறை வசதி யை ஏற்படுத்துவதற்கான வழியைக் காட்டியு ள்ளது. இது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப் ்பட்டு, இந்த மாதம் 4ஆம் தேதி அவர்களது அலுவலகங்களுக்கு இடையேயான சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கான பிரத்யேக கழிப்பறை உள்ள மற்றும் இல்லாத கிளைகளின் விவரங்களை வழங்குமாறு வட்ட அலுவலகங்களை கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், பெண்களுக்கான பிரத்யேக கழிப்பறை இல்லாத கிளைகளில், பெண் ஊழி யர்களுக்கு தனி கழிப்பறை கட்ட அந்தந்த கிளைகள், அலுவலகங்களின் உரிமையா ளர்களிடம் வலியுறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், பெண்களுக்கு தனி கழிப்பறை கட்ட கட்டிட உரிமையா ளர்கள் சம்மதிக்காத பட்சத்தில், வங்கி யின் செலவில் வங்கியே அதைகட்டலாம் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட் ்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பறை அமைக்க கனரா வங்கி முன்வந்துள்ளது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அரசு மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பறை வழங்குவது தொடர்பாக வழி காட்டியுள்ள கனரா வங்கியைப் பின்பற்றி மற்ற வங்கிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.