தருமபுரி,செப்.26- தருமபுரி மாவட்டம் நாகாவதி அணையை ஒட்டி உள்ள பகுதியில் வருடம் முழுவதும் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயி ஒருவர் செண்டு மல்லி பயிரிட்டிருந்தார். செடிகள் நன்கு வளர்ந்து பூ பூத்த தருணத்தில் விலை குறைவு மற்றும் தொடர் நோய் தாக்குதல், மேலும் பூக்களை பறிப்பதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பறித்தாலும் பூ விலை சரிவால் பறிக்கின்ற பூக்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. தற்பொழுது செண்டுமல்லி ஒரு கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் செண்டுமல்லி தோட்டத்தை தொடர்ந்து பராமரிக்கும் சிக்கல் மற்றும் செலவினங்களை யோசித்து விவசாயி ஒருவர் மாற்றுப்பயிரிட முடிவு செய்தார். இதனால் பூக்கள் பூத்து இருந்த செண்டுமல்லி தோட்டத்தை அப்படியே டிராக்டர் வைத்து உழுது அழித்துவிட்டார்.