tamilnadu

img

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தது அமலாக்கத்துறை

சென்னை, ஜூன் 17- அமலாக்கத்துறையால் கைதாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி யின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை நீதிமன்றம் உத்தர விட்டது. மேலும் அவரை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை காவலுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிமன்ற ஊழியர்கள் சனிக்கிழ மையன்று (ஜூன் 17) கையெழுத்து வாங்கினர்.  அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை (ஜூன்16) சுய  நினைவில் இல்லாததால் அவரிடம்  கையெழுத்து வாங்க முடியாமல் போனது. இந்நிலையில் அவரை அமலாக்கத்துறையினர் 8 நாள் போலீஸ் காவலில் எடுத்ததற்காக கையெழுத்தை பெற்ற னர்.