tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி மூத்த தலைவர் சக்தி சிங்

வெறுப்புப் பேச்சுக்கு உ.பி., எம்எல்ஏ ஒருவர் (அப்பாஸ் - எஸ்பிஎம்எஸ் கட்சி) 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். ஆனால் பாஜகவின் வரலாறே வெறுப்பு பேச்சுகளால் தான் நிரம்பியுள்ளது. சமூகத்தில் வெறுப்புணர்ச்சியை விதைத்தவர்கள் பாஜக தான். அவர்கள் மீது என்ன நடவடிக்கை?

ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் ராவ்

கொரோனா தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் நிலைமையை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முந்தைய கொரோனா தொற்று பரவலின் போது உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை சமாளிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கட்டமைப்பு தேவையான அளவில் உள்ளது.

தில்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ்

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிவிட்டது. மற்ற மாநிலங்களில் செய்ததை போன்று தில்லி மக்களையும் பாஜக முட்டாளாக்குகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு மாநிலத்தில் சுகாதார மையங்கள் எதுவும் புதிதாக துவங்கப்படவில்லை. புதுப்பிக்கப்பட்ட மொஹல்லா கிளினிக்குகள் தான் அவை.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டுவிட்டார்களா? புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகிறோம். அதற்கான தகுந்த விடையை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.