கேரளத்தில் கருத்தரங்குகள் தொடக்கம்
எஸ்எப்ஐ அகில இந்திய மாநாடு
கேரள மாநிலம் கோழிக்கோடில் ஜுன் 27 முதல் 30 வரை நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) 18 ஆவது அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு தலைப்புகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கு கள் மே 24 சனியன்று தொடங்கின. “ஊடகங்களின் அரசியல்” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் டி.எம். ஹர்ஷன், சட்டமன்ற உறுப்பினர் எம். விஜின், எஸ்.கே.சஜீஷ் ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கம் சனியன்று பிற்பகல் 3 மணிக்கு வடகரா கலாச்சார சதுக்கத்தில் நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு தலைப்புகளில் பகுதி அளவில் கருத்த ரங்குகள் நடைபெற உள்ளது என செய்தி கள் வெளியாகியுள்ளன. புத்தலத்து தினே சன், எம். ஸ்வராஜ், கே.கே.ராகேஷ், பி.கே.பிஜு, ஏ.ஏ.ரஹீம், டி.வி.ராஜேஷ், வி.கே.சனோஜ், ஜேக் சி தாமஸ், பேராசி ரியர் சி. ரவீந்திரநாத் மற்றும் பி.எம். அர்ஷா ஆகியோர் இக்கருத்த ரங்குகளில் பங்கேற்க உள்ளனர். அதே போல எஸ்எப்ஐ அகில இந்திய மாநாட் டின் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 1,001 உறுப்பினர்களைக் கொண்ட வரவேற்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.