திருச்சிராப்பள்ளி, நவ.5- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் ஞாயிறன்று ‘வாச்சாத்தி வழக்கும் தீர்ப்பும்’ என்ற கருத்தரங்கம் மற்றும் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் சிவ. வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் வரவேற்றார். வாச்சாத்தி வழக்கும் தீர்ப்பும் குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பெ.சண்முகம், தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், தமுஎகச மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா ஆகியோர் பேசினர். முன்னதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பெ.சண்முகத்திற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.