புதுதில்லி, ஜுன் 5- நமது நாட்டில் திறந்த வெளி கல்வி வழங்குவதில் தேசிய அளவில் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த டிசம்பர் 20, 2022 அன்று நடைபெற்ற 79வது கல்வி கவுன்சில் கூட்டத்தில் கல்வி கவுன்சிலின் புதிய உறுப்பினர்களாக 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ கத்தில் இருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முது முனைவர் இராம.கதிரேசன், தற்போது தேசிய அளவில் செயல்படும் கல்வி கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பினை இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல் கலைக்கழக கல்வி ஒருங்கிணைப்பு பிரிவு, 2023 மே 31 தேதியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. தமிழ கத்தில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள பேரா. முது முனைவர் இராம. கதிரேசன் வேளாண்மை புலத்தில் உழவியல் துறை தலைவர், வேளாண் புல முதல்வர் மற்றும் அண்ணா மலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான இயக்குநர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் குழு உறுப்பினர் போன்ற பதவிகளில் இருந்து அனு பவம் பெற்றவர் ஆவார்.