தஞ்சாவூர், ஜன.6- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆலிவர் உத்தரவின் படியும், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கனகராஜ் அறிவுறுத்தலின்படியும், பேராவூரணி கடைவீதியில் பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல், துப்பு ரவு ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பேரூராட்சி பணியாளர்க ளால் மளிகைக்கடை, உணவகம், தேனீர் கடை, பேக்கரி ஆகியவற்றில் பயன் பாட்டில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு முறை பயன்படுத்தும், பிளாஸ்டிக்பொ ருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வின் போது மொத்தம் 13 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டதோடு, ரூபாய் 15 ஆயிரத்து 800 அபராதமாக விதிக்கப்பட்டது.