tamilnadu

img

சேகுவேரா புதல்வி அலெய்டா குவேரா வருகை : சென்னையில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி

சென்னை, ஜன.12- சே குவேரா புதல்விக்கு சென்னை யில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கியூபப் புரட்சியாளரும், உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகருமான தோழர் சேகுவேரா அவர்களின் புதல்வி அலெய்டா குவேராவும், பேத்தி பேராசிரி யர் டாக்டர் எஸ்டெஃபானி குவேராவும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 2023 ஜனவரி 17 அன்று சென்னை வரும் அவர்களுக்கு விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் அளிக்கப்படுகிறது. அதோடு, கியூப சோசலிசத்தின் மாண்புகளை பறைசாற்றவும், கியூப மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகை யிலும் 18.01.2023 அன்று சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும், முன்னாள் கேரள அமைச்சருமான எம்.ஏ.பேபி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கவி ஞர் கனிமொழி எம்.பி., சிபிஐ மாநில செய லாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா, விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.,  மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சி  தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மற்றும் இடதுசாரி இயக்க தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.