tamilnadu

img

தேடி (யே) வந்தது, திறமையால் வந்தது!

கார்த்திகேயன்  

மக்கள் பிரச்சனையில் சமூக அக்கறை கொண்டவர்கள்  தங்களை வெளிப் படுத்தாமல் ஒதுங்கி நிற்க முடியாது. காலம் அவர்களை முன்னோக்கி தள்ளிக் கொண்டு வந்து நிறுத்திவிடும். இப்படித்தான் கலை ஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பிறக்கிறார் கள். பின்னர் மக்களுக்காக களத்தில் குதிக்கி றார்கள் வீதியில் இறங்குவார்கள். இதுதான் யதார்த்தம். கலை கலைக்காகவா, மக்களுக்காகவா என்ற கேள்வி கலை இலக்கியம் தொடங்கிய காலத்தில் இருந்து கேட்கப்பட்டு, அதற்கு பல விடைகளும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. மாறாதது எதுவும் இல்லை என்ற காரல் மார்க்ஸ் அவர்களின் கூற்றுக்கு ஏற்றவாறு, தெருக் கூத்தாக தொடங்கிய கலை நாடகமாக திரைப்பட மாக பல்வேறு பரிணாமங்களை அடைந்து மக்கள் கவனத்தை ஈர்த்து மக்களை மகிழ்வித்து அவர்கள் உணர்வோடு ஒன்றாக கலந்து விட்ட ஒன்றாக மாறிவிட்டது. தெருக்கூத்து என்ற அந்த கலை வடிவத்தை வீதி நாடகம்  என்று மாற்றி மக்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு சென்ற பணியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் துவக்கி வைத்து. அது ஒரு பெரும் இயக்கமாக மாறியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பல தெரு நாடகக் குழுக்கள் மாவட் டங்கள் தோறும் ஆரம்பிக்கப்பட்டன. அதில் குறிப்பாக சென்னை நகரத்தில் விடியல் கலைக்குழு, சென்னை கலைக்குழு ஆகிய கலைக்குழுக்கள் மாநகரம், பயணம் போன்ற பல நாடகங்களை வீதி நாடகங்களாக நடத்தி சாதாரண ஏழை எளிய மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. கலை கலைக்காக அல்ல, மக்களுக்காகவே என்பதை அந்த வீதி நாடகங்கள் நிரூபித்தன என்று சொன்னால் அது மிகையாகாது.

அப்படி சென்னை கலைக்குழு  நடத்திய பயணம் நாடகத்தில் நகர தேவன் என்கிற ஒரு பாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் அடைந்தவர் தோழர் ராமு அவர்கள். அவரை தீக்கதிர் பத்திரிகை அலுவலகத்திலும், அந்த நாடகம் நடத்துகிற  இடத்திலும் சந்தித்து அவருடன் உரையாடி உள்ளேன்.  அவர் திரைத்துறைக்கு சென்ற பின்னர் அதே நாடகத்தை நான் மீண்டும் பார்த்த பொழுது அந்த நகர தேவன் பாத்திரத்தில் நடித்த நடிகர்கள் யாரும் அவர்போல் என் மனதை கவரவில்லை. அப்படி தான் ஏற்ற பாத்திரத்தை சிறப்பாகச் செய்யும் ஒரு மக்கள் கலைஞனாக பூ  ராமு அவர்கள் விளங்கினார் என்றால் அது மிகையாகாது. பூ படத்தில் அவர் நடித்த அந்த பாத்திரம் கூட அவரின் அந்த சிறப்பான நடிப்புக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்றே அவர் என்னிடத்தில் சொன்னார்.  பூ படத்தில் அவர் நடித்த அந்த பாத்திரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ரொம்பவும் சொதப்பலாக நடித்த பொழுது  உயிர்ப்புள்ள இந்த பாத்திரத்தை நடிக்க ஒரு நல்ல கலைஞன் வேண்டும் என்று அதன் இயக்குனர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கலைஞர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் ராமு அவர்களை அடையாளம் காட்டினார்கள். அந்த பாத்திரத்தில் ராமு சிறப் பாக நடித்தார் அதுவே திரையுலக  வாசலை அவருக்கு திறந்து வைத்தது. அதன் பின்னர் பல படங்களில் அவர் தான் ஏற்ற பாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்தார் என்பது அவர் கலைத் திறமைக்கு சான்றாகும். பூ படத்தில் அவருக்கு கிடைத்த அந்தப் பாத்திரம் அவரது நடிப்பின் திறமை காரணமாக அவரைத் தேடியே வந்தது. ஒரு முறை அவரை தீக்கதிர் பத்திரிகை அலு வலகத்தில் சந்தித்து சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

நான்அவரிடம் பேசிக் கொண்டிருந்த அந்த நாளில் தீக்கதிர் பத்திரிகையில் தோழர்கள் என்ற என்னுடைய  சிறுகதை வெளிவந்திருந்தது அதை அவரிடம் காட்டினேன். படித்துப் பார்த்தவர் கதை மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார். அதை ஒரு குறும்படமாக எடுத்தால் கூட மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் சொன்னார்.  ராமு பாராட்டிய சிறுகதை இதுதான்: ஒரு தெருக்கூத்து கலைஞரான தோழர்  தன் நண்பர் ஒருவரிடம் கெஞ்சி கூத்தாடி பணம் பெற்றுக் கொண்டு ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு வெளியூருக்குச் செல்கிறார். போன இடத்தில் அவரிடம் இருந்த பணமும் தொலைந்து விடுகிறது. ‘வறுமையே வெளியேறு’ என்று தான் நடித்த ஒரு தெரு நாடகத்தில் தன்னை பாராட்டிய ஒரு தோழர் அவர் சென்ற அந்த ஊரில் தொழிற்சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தது ஞாபகத்திற்கு வரவே அவரை சந்தித்து அவரிடம் சென்னைக்கு செல்வதற்கு கடன் கேட்கிறார்.அந்த தோழர் அன்று அவர் தலைமையேற்று நடத்தும் கூட்டத்தில் நடத்தப்பட இருந்த நாடகம் நின்று போனதால் ‘வறுமையே வெளியேறு’  என்று அந்த கலைஞன் நடத்திய நாடகத்தை அங்குள்ள கலைஞர்களுடன் நடத்தித் தருமாறு கேட்கிறார்.

அவரும் சரி சொல்ல நாடகம் சிறப்பாக நடந்து முடிகிறது. நாடகத்தின் முடிவில் நாடகத்தை நடத்தித்தந்த தோழரின் பணம்தொலைந்து போன விவரத்தை மேடையில் கூறி அவருக்கு உதவி செய்யுமாறு அந்த கூட்டத்தில் உள்ள  பார்வையாளர்களிடம் அந்த தோழர் வேண்டுகோள் விடுக்க நாடகத்தை ரசித்த தோழர்கள் தோழமை உணர்வோடு எல்லோரும் அளித்த  பணத்தை வைத்துக்கொண்டு அந்த கலைஞன் ஊர் வந்து சேருகிறான். இதுதான் நான் எழுதிய தோழர் என்ற சிறுகதையின் அடிப்படையான கருத்து. அதை  ராமு மனதாரப் பாராட்டினார். குறும்பட மாக எடுத்தால் கூட சிறப்பாக இருக்கும் என்றும் சொன்னார். அதற்கு பிறகு அவருக்கும் எனக்கும் பெரிய அளவுக்கு தொடர்பு இல்லை. ஆயினும் நல்ல கதையை அடையாளம் கண்டு கொள்ளுகிற கலைஞனாக நல்ல பாத்திரங்களை உயிர் கொடுத்து நடிக்கும் ஒரு எதார்த்தமான நடிகனாக தெரு நாடகத்திலும் சரி, திரை உலகத்திலும் சரி வாழ்ந்தார் என்பது  உண்மை. வாழ்க அந்த கலைஞனின் புகழ். அவரைப் போன்ற கலைஞர்கள் நிறைய உருவாக வேண்டும் என்பதே என் மனப்பூர்வமான எண்ணம்.