tamilnadu

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

திருவில்லிபுத்தூர், டிச.28- திருவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி செக்கடி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செல்வ விக்னேஷ்(12). இவர் திருவில்லிபுத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். திங்களன்று மாலை நண்பர்கள் சிலருடன் ஆண்டாள் கோவில் திருமுக்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கினார். திருவில்லி புத்தூர் தீயணைப்பு துறையினர் குளத்தில் மாணவரின் உடலை தேடி மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.