tamilnadu

img

போதைக்கு எதிராக பள்ளி மாணவிகள் முழக்கம்

கோவை, ஆக.11- கோவையிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகள் இணைந்து போதைப்பொரு ளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாடு அரசு சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் மத்தியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்ஒரு பகுதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில், கிருஷ் ணம்மாள் மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. கோவை மாநகர காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவிகள் ஒன்றிணைந்து “போதைப்பொருளை ஒழிப்போம்” என்று ஒரு சேர முழங்கினர். இதனைத்தொடர்ந்து, போதைப்பொருளை எந்த விதத் தில் பயன்படுத்தவோ, அதனை மற்றவர்கள் பயன்படுத்து வதை ஊக்குவிக்கவோ மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து உதவி ஆணையர் சேகர் பேசுகையில், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை யாராவது பயன்படுத்துவதை அறிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை காட்டிக் கொடுப்பதாக நினைக்காமல் அவர்களின் குடும்பத்தை பாது காப்பதாக எடுக்கும் செயலாக நினைக்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணம்மாள் பள்ளி தலைமை ஆசிரி யர் ரோஸ்லின் ஜெயா, ஆசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற் பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.