புதுக்கோட்டை, ஜன.21- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள சிபிசிஐடி காவல்துறையினருடன் காவல்துறை கண்காணிப்பாளர் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தி னார். வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து வெள்ள னூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்ப வத்தில் யாரும் கைது செய்யப்படாத தால் வழக்கை சிபிசிஐடி விசார ணைக்கு தமிழ்நாடு அரசு ஜனவரி 14-ஆம் தேதி மாற்றியது. இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி திருச்சி காவல் துணைக் கண்கா ணிப்பாளர் பால்பாண்டி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி பிரிவின் 35 பேரை உள் ளடக்கிய 10 தனிப்படையினர் பிரிந்து சென்று வேங்கைவயல், இறையூர் மக்களிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை பெண் போலீசாரும் பல்வேறு வீடு களுக்குச் சென்று விசாரணையில் ஈடு பட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மேற்கொள் ளப்பட்ட விசாரணை நிலவரம் குறித்து புதுக்கோட்டையில் உள்ள சிபி சிஐடி அலுவலகத்தில், எஸ்.பி தில்லை நடராஜன் கேட்டறிந்தார். அப்போது, இதுவரை எத்தனை பேரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது. விசாரணை செய்யப் பட்டவர்களிடம் தவறு செய்தவர்களை கண்டறியும் வகையில் முகாந்திரம் இருந்ததா? ஆதாரங்கள் ஏதும் கைப் பற்றப்பட்டுள்ளனவா? அந்தப் பகுதி யில் இதற்கு முந்தைய காலங்களில் முன்விரோதம் இருந்துள்ளனவா? என்ற அடிப்படையில் போலீசாரிடம் சிபிசிஐடி எஸ்.பி தில்லை நடராஜன் விவரங்களைக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையை முடுக்கி விடும் வகையில் எஸ்.பி பல்வேறு ஆலோ சனைகளை கூறியதாகவும், குற்ற வாளி விரைவில் கைது செய்யப்படு வார் எனவும் சிபிசிஐடி காவல்துறை யினர் தெரிவித்தனர்.