tamilnadu

img

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை.. தட்டார்மடம் செல்வம் கொலை... சிபிசிஐடி, சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடம் செல்வன் கொலை வழக்கில் காவலர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்யவும், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் மீண்டும் சிபிஐ நிலைஅறிக்கையை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன்இருவரும் காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது.இந்த வழக்கு புதனன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக் கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.விசாரணையின்போது வழக்குவிசாரணை குறித்த நிலை அறிக்கையை சிபிஐ உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது.

அதேபோல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட மற் றொரு விசாரணை நபரான ராஜாசிங் வழக்கு குறித்து சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்தது.விசாரணையின்போது சிபிஐ, இரண்டு வழக்குகளிலும் மொத்தம் பத்து காவலர்களை கைது செய்துஇரண்டு வழக்குகளையும் ஒன்றிணைத்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்யப்பட்டதாக தெரிவித்தது.இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மற்றொரு விசாரணை நபரான ராஜா சிங் துன்புறுத்தப்பட்டது, மார்டின் என்பவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டது குறித்தும் தட்டார்மடத்தில் செல்வன் கடத்தி கொலை செய்யப் பட்டதில் தட்டார்மடம் காவலர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.சாத்தான் குளம் தந்தை, மகன் கொலைவழக்கில் சிபிஐ தற்போது வரை நடைபெற்ற விசாரணை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 5- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.