சென்னை ஐஐடியில் இடம் பிடித்த சேலம் பழங்குடியின மாணவி
சென்னை, ஜூன் 5 - ஜேஇஇ நுழைவுத் தோ்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி. சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி (50). இவரது மனைவி கவிதா (45). தையல் தொழிலாளி. கடந்தாண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ் வரி, பரமேஸ்வரி என 3 மகள்களும், ஸ்ரீகணேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர். வேதியியல் பட்டதாரியான ஜெக தீஸ்வரி, சென்னையில் ஒரு தனி யார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரு கிறார். கணிதப் பட்டதாரியான ஸ்ரீ கணேஷ், தந்தை மறைவுக்குப் பிறகு அவரது தொழிலை தொடர்ந்து வருகிறார். பரமேஸ்வரி, கருமந் துறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு சேர்ந்துள்ளார். 8-ஆம் வகுப்பு வரை கருமந்துறையில் ஒரு தனியார் பள்ளியில் படித்த ராஜேஸ் வரி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கருமந்துறை பழங்குடி யினர் நல அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 10-ஆம் வகுப்பில் 500-க்கு 438 மதிப்பெண்களும், 12-ஆம் வகுப் பில் 600-க்கு 521 மதிப்பெண்கள் பெற் றார். இவருக்கு பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தேசிய அளவில் 417 ஆவது இடம் பிடித்த ராஜேஸ்வரி, சென்னை ஐஐடியில் படிப்பதற்கு வாய்ப்பு பெற்றுள்ளார். கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு மாணவி சென்னை ஐஐடி-யில் படிப்பதற்கு முதன்முறையாக இடம் பிடித்ததற்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். எனது தந்தை, என்னை ஐஐடி போன்ற பெரிய புகழ்மிக்க கல்வி நிறுவனத்தில் படிக்க வைத்து உயரிய பதவியில் அமர வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எதிர் பாராதவிதமாக கடந்தாண்டு இறந்து போனார். தந்தை மறைவிற்கு பிறகு எனது அண்ணன் ஸ்ரீகணேஷ் தந்தை யின் தொழிலை செய்து என்னை படிக்க வைத்தார். தற்போது சென்னை ஐஐடியில் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளேன். இதற்கு எனது அண்ணன், பயிற்சி அளித்து ஊக்கப்படுத்திய ஆசிரியா்களுக்கு நன்றி என ராஜேஸ்வரி தெரிவித் துள்ளார். பழங்குடியின மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் படித்து தேசிய அளவிலான தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை யும், பெரிய நிறுவனங்களில் சேரும் வாய்ப்பையும் பெற வேண்டும் என்று கூறியிருப்பதோடு, இந்த வெற்றியின் மூலம் தனது தந்தையின் கனவை நனவாக்கி இருப்பதாகவும் ராஜேஸ்வரி மகிழ்ச்சியும், பெரு மிதமும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வாழ்த்து “தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நன வாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாத னைக்கு என் வாழ்த்துகளை தெரி வித்துக் கொள்கிறேன். அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தை யும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சி யோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடி-க்கு உண்மையான பெருமையாக அமை யும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.