சேலம், ஜூலை15- சேலம் பெரியார் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை தேர்வில் வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில், சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் வர லாற்றுத்துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்களுக் கான செமஸ்டர் இரண்டாம் தேர்வு நடைபெற்று முடிந்தது. இத்தேர்வில் மாணவர் களுக்கு வழங்கப்பட்ட வினாத் தாளில் 11ஆவது கேள்வியாக, `தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப் பட்ட சாதி எது?’ என்று மாணவர்கள் மத்தியில் சாதிய உணர்வை ஏற் படுத்தும் விதமாக கேள்வி கேட்கப் பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகத்தில் இத்தகைய கேள்வியை வினாத் தாளில் இடம்பெறச்செய்தது எதேச்சையான செயலாக இருக்கமுடியாது.
திட்டமிட்டே வலதுசாரி சிந்த னையாளர்கள் இதுபோன்ற கேள்விகளை புகுத்தியுள்ளனர் என்கிற குற்றச்சாட்டை மாண வர்கள் எழுப்புகின்றனர். இந்நிலையில் இந்த கேள்வித் தாள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள் ளது. கடுமையாக பலரும் விமர் சித்து பதிவு செய்துவருகின்றனர். இதுதொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாண வர்கள் கூறுகையில், சமீபகால மாக பல்கலைக்கழகத்தில் சாதி யப் பாகுப்பாடு தலைவிரித்தாடு கிறது. சமீபத்தில் தான் சமூக நீதி ஆய்வுக்குழு பல்கலைக்கழ கத்தில் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் தற்போது இது மாதிரியான செயலில் ஆசிரி யர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக கட்டுப்பாடில் இயங்கக்கூடிய கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் தான் வினாத்தாளை தயார் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் இதனை யாரும் பின்பற்று வதில்லை. வெளியில் உள்ள ஆசி ரியர்களை வைத்து வினாத்தாள் தயார் செய்கின்றனர். மேலும் வினாத்தாள் சம்பந்தபட்ட கல்லூரி களுக்கு தேவையானவைகளை பல்கலைக்கழகம் தான் பிரிண்ட் செய்து தர வேண்டும். இதில் எதையும் பல்கலைக்கழகம் பின்பற்றுவதில்லை.
தொடர்ந்து பெரியார் பல்கலை க்கழகத்தில் நடைபெறும் சாதி ரீதியான பாகுபாடு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மத்தியிலும், தற்போது மாண வர்களின் வினாத்தாள் வரை பிரதிபலித்துள்ளது. இப்பிரச்ச னையில் பல்கலைக்கழக மானியக் குழு, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இந்நிலையில், பல்கலைக் கழக தேர்வு விதிமுறைகள் குறித்து பெரியார் பல்கலைக் கழக பொறுப்பு பதிவாளர் கோபி கூறுகையில், “வினாத்தாளில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் குறித்து உரிய விசாரணை செய்து வருகிறோம். சம்பந்தப் பட்ட கேள்வியை தயார் செய்த ஆசிரியர் யார் என்று கண்டறிந்து அவர் மீது துறை ரீதியான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் படும். பல்கலைக்கழக கட்டு பாட்டின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில் தேர்வு நடத்துவது தான் பல்கலைக்கழகத்தின் வேலை. வினாத்தாள் அனைத் தும் அதற்கென அமைக்கப்பட்ட தனிக்குழுவினர், தலைவர் ஆகி யோர் தான் தயார் செய்வார்கள்” என்றார்.