பாய்மரப் படகு கடல் சாகச பயணத் தொடக்க விழா
புதுச்சேரி தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி, பாய்மரப் படகு சாகச பயணத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். கப்பற்படை பிரிவு மற்றும் புதுவை தேசிய மாணவர் படை பிரிவை சேர்ந்தவர்கள் புதுச்சேரியிலிருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுச்சேரி திரும்பினர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.