தூத்துக்குடி, டிச. 23- தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் நிவாரண உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக வர லாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்தியது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், பொது இன்சூரன்ஸ் ஒய்வூதியம் பெறுவோர் சங்கம் சார்பில் டிசம்பர் 23 ஆம் தேதி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மழைவெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளான ராஜீவ் நகர், பி.அன்.டி காலனி, சுடலை காலனி, லெவிஞ்சி புரம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநகர் செய லாளர் தா.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் அப்பா துரை, புவிராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து, அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் தென் மண்டல பொதுச் செயலாளர் செந்தில் குமார், தென்மண்டல துணைத் தலைவர் முத்து குமாரசாமி, திருநெல்வேலி கோட்ட பொதுச் செயலாளர் பொன்னையா, முருகன், பட்டன், சீனிவாசன், மதுபால், மதுரை மண்டல நிர்வாகி கள் சுரேஷ் குமார், தனிகைராஜ், மகாலிங்கம், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன், புஷ்ப ராஜ், பாண்டியராஜன், பிரபு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் கார்த்தி, மாநிலச் செயலாளர் சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.