tamilnadu

img

சிபிஎம் நாமக்கல் மாவட்ட செயலாளராக எஸ்.கந்தசாமி தேர்வு

நாமக்கல், டிச.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளராக எஸ்.கந்தசாமி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட 8 ஆவது மாநாடு டிச.15,16 ஆகிய தேதிகளில் எலச்சி பாளையத்தில் தோழர்கள் கே.தங்க வேல், எஸ்.கே.சேஷாசலம் நினைவ ரங்கம், தோழர் பி.சிங்காரம் நுழைவு வாயிலில் நடைபெற்றது. கட்சியின் செங்கொடியினை கே.சரோஜா ஏற்றி  வைத்தார். மாநாட்டிற்கு ந.வேலுச் சாமி, பி.செல்வராஜ், பைரோஸ்பானு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெரு மாள் அஞ்சலி தீர்மானத்தை முன்மொ ழிந்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுரேஷ் வரவேற்புரையாற்றினார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி சமர்ப்பித்த அறிக்கையின் மீது மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் விவாதித்தனர்.  

புதிய மாவட்டக்குழு தேர்வு இதைத்தொடர்ந்து கட்சியின் புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது மாவட்ட செயலாளராக எஸ்.கந்தசாமி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்களாக ஏ.ரங்கசாமி, பி.பெருமாள், எம்.அசோகன், ந.வேலுச் சாமி, கே.தங்கமணி, எஸ்.தமிழ்மணி,  பி.ஜெயமணி, எஸ்.சுரேஷ், ஏ.டி.கண்ணன், எம்.கணேஷ் பாண்டியன் மற்றும் 35 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். மேலும் தீக்கதிர், மார்க்சிஸ்ட், செம் மலர்  சந்தாக்களை பெற்றுக் கொண்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் வாழ்த்து ரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பி னர் என்.பாண்டி நிறைவுரையாற்றினார்.