tamilnadu

img

இந்திய மாணவர்கள் 200 பேருக்கு ரஷ்ய அரசு உதவித்தொகை

சென்னை, ஜன. 28- சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார அரங்கில் ரஷ்ய கல்வி தினம் சனிக்கிழமை (ஜன. 28) கடைபிடிக்கப்பட்டது.  ரஷ்ய அரசு வேளாண் பல்கலை (மாஸ்கோ), யூரல் மாகாண பொருளாதார பல்கலைகழ கம் (யெகாடெரின்பர்க்), ஹெர்சன் பல்க லைக்கழகம் (செயின்ட் பீட்டர்ஸ்பர்க்), ரஷ்யா வின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளின் ஆன்லைன் பங்கேற்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ரோஸ்டோவ் மாநில பொருளாதார பல்கலைக்கழகம் (ரோஸ்டோவ்-ஆன்-டான்), உல்யனோவ்ஸ்க் மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (உல்யனோவ்ஸ்க்), சைபீரி யன் போக்குவரத்து பல்கலைக்கழகம் (நோவோ சிபிர்ஸ்க்) மற்றும் பல இந்திய மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சென்னையிலி ருந்தும், பிற நகரங்களில் இருந்தும் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் ரஷ்ய பல்கலைக்கழ கங்களின் பிரதிநிதிகளிடம் நேரடியாக கேள்வி களைக் கேட்டனர். ரஷ்ய கல்வி உதவித்தொகை இணையதளமான Education-in-russia.com  இல் பதிவு செய்யும் முறை குறித்து சென்னை யில் உள்ள திட்டப் பொறுப்பாளர் மயோரோவா வாலண்டினா விளக்கினார். ரஷ்ய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் 2023 - 2024 மூலம் ரஷ்யாவின் சிறந்த  பல்கலைக்கழகங்களில் முழு நிதியுதவியுடன் உயர் கல்வி பயில இந்திய மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள். education-in-russia.com என்ற இணையதளம் வழியாக  மட்டுமே பதிவுகள் ஏற்கப்படும். இதில் மாண வர்கள் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, தாங்கள் படிக்க விரும்பும் பாடத்தைத் தேர்வு செய்து, 6 பல்கலைக்கழகங்கள் வரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். வரும் பிப். 20ஆம் தேதி பதிவு செய்வதற்கான கடைசி நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ரஷ்ய அரசு கல்வி உதவித்தொகை  வழங்கி வருகிறது.  இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் இயற்பியல், அணுசக்தி, வானூர்தி பொறியியல் மற்றும்  இயற்கை அறிவியல் ஆகிய உயர் கல்விக்கு  அழைக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு 20 எம்பிபிஎஸ் பயில விரும்பும் மாணவர்கள் உட்பட 200  மாணவர்களுக்கு ரஷ்ய அரசு உத வித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.