சென்னை, மார்ச் 4- வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் தாக்கப்படு வதாக வதந்திகளைப் பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட மாநிலத் தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- வாழவைக்கும் தமிழ்நாடு! வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல்வார்கள். தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடை யில் பேசிய வடமாநிலத்துப் பெண் ஒருவர் பேசிய பேச்சு ஒன்று, சமூக ஊடகங்களில் சமீபத்தில் அதிகம் பரவியது.
“வாய் பேச முடியாத தனது குழந்தை யைத் தூக்கிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வாழ வந்த நான், ரேசன் அட்டை பெற்று, அதன் மூலமாக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் மதிப்பி லான சிகிச்சையை இலவசமாகச் செய்து வைத்தேன். இப்போது என் குழந்தை பேசு கிறது. இதற்கு தமிழ்நாடு தான் காரணம்” என்று அளித்த பேட்டியை யாராலும் மறக்க முடியாதது. தாய்த் தமிழகம் என்பது மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். வர்த்தகத்திற்காக, தொழிலுக்காக, மருத்துவத்துக்காக, கல்விக்காக, வேலைக்காக என பல்வேறு மாநில மக்கள் தமிழகத் திற்கு வருவது காலம் கால மாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழகத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள். சமீப கால மாக வேலை வாய்ப்புகளைத் தேடி அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் தமிழ்நாட்டிற்கு வருவது அதிகரித்து வரு கிறது. சேவைத் துறைகள், கட்டுமானம், சிறு மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் தமிழகம் திகழ்வது தான் இதற்குக் கார ணம். தமிழகத்திற்கு சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதே இங்கு பல்வேறு மாநி லங்களிலிருந்து தொழிலாளர்கள் வருவ தற்குக் காரணமாகும். இவ்வாறு நம் பிக்கையோடு வருகை தரும் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவை யான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாது காப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது.
உதவி மையங்கள்
கொரோனா இரண்டாவது அலையின் போது சொந்த மாநிலங்க ளுக்குத் திரும்பச் செல்ல விரும்பிய வடமாநிலத் தொழி லாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், பல்வேறு மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டன. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டன.
நிவாரணம்
சென்னைப் பெருநகர மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து அந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு, போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. அதேபோல், குடும்ப அட்டை இல்லாத, வேலைகளை இழந்த 1 லட்சத்து 29 ஆயிரத்து 440 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமை யல் எண்ணெய் வழங்கப்பட்டது.எப்போ தும் போல் வரவேற்கிறோம்.
கெட்டபெயர் ஏற்படுத்த முயற்சி
வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவ னித்து வருகிறோம். இந்த அமைதிமிகு சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்க ளின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டு மென்ற எண்ணத்தோடு, சில குறுமதியா ளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலா ளர்களுக்கும் இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும். அதனால்தான், தற்போதும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தமிழ்நாடு எப்போதும் போல் வரவேற்கின்றது.
கீழ்தரமான அரசியலுக்கு கண்டனம்
வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழகத்தில் நடைபெற்ற தாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச் சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு வெளிமாநிலத் தொழி லாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவ தாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந் திய நாட்டிற்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளை விப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சனையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரி யது.
அச்சம் கொள்ளத் தேவையில்லை
வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தி னால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலா ளர்களுக்கும் அரணாக இந்த அரசும், மக்க ளும் இருப்பார்கள். இங்குள்ள தொழிலா ளர் சகோதரர்களே, தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் யாரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம். பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையி லான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததைப் போல பரப்பியதே, இதன் தொடக்கமாக அமைந்துள்ளது. எனவே, ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்ந்தும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும், செய்திகளை உறுதிப்படுத்தாமல் பர பரப்புக்காக வெளியிட வேண்டாம்.
பீகார் முதல்வரிடம் உறுதி
பீகார் மாநில முதல்வர், நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக நான் பேசியிருக்கிறேன். அனைத்துத் தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதை யும் அவருக்கு உறுதியாகச் சொல்லி யிருக்கிறேன். வளமான, அமைதியான தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடு படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.