சென்னை, ஏப். 23- பொருளாதாரப் பிரச்சனைகளை மறைக்க ஆட்சியாளர்கள் மத மோதல் களை உருவாக்கிக் கொண்டிருக்கி றார்கள் என்று புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் சாடினார். உலக புத்தக தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயத்தின் சார்பாக தமிழ கம் முழுவதும் 50 இடங்களில் ஏப்ரல் 23 முதல் மே 5 வரை புத்தகக் கொண்டாட்டம் நிகழ்வு நடைபெற உள்ளது. அதன் தொடக்க விழாவும் பேராசிரியர் பு.அன்பழகன் எழுதிய ‘இந்திய பொருளாதாரமும் அறை கூவல்களும்’ நூல் வெளியீட்டு விழா வும் சென்னை மாநிலக் கல்லூரி வளா கத்தில் வெள்ளியன்று (ஏப். 22) நடை பெற்றது. நூலை வெளியிட்டு கே.பால கிருஷ்ணன் பேசுகையில், “முதலா ளித்துவ சமூகத்தின் அடிப்படை கோட்பாடு லாபம் மட்டும்தான். லாபத்தை அதிகரிப்பது மட்டுமே அவர்களின் முதன்மையான குறிக்கோ ளாகும். ஆனால் உலகில் உள்ள பொரு ளாதார நிபுணர்கள் எல்லாம் லாபம் எப்படி வருகிறது என்று கூறும்போது, ஒரு பொருளை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதினால் அல்லது ஒரு பொருளை குறைந்த செலவில் உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்றால் கிடைப்பதுதான் லாபம் என்று கூறினார்கள். ஆனால் அந்த பொதுவான விதியை மாற்றி விற்பனையிலே மட்டும் வருவது லாபமல்ல, உற்பத்தியிலேயே தொடங்கி விடுவதுதான் லாபம் என்று முதன்முதலிலே உலகிற்கு அறி முகப்படுத்தியதுதான் காரல்மார்க்சின் மகத்தான நூலான “மூலதனம்’’. உழைப்புதான் உலகத்தை சிருஷ்டிக் கிற கர்த்தா. உண்மையான பிரம்மா எதுவென்றால் உழைப்பு மட்டும்தான். உழைப்பு என்பது இல்லா விட்டால் உலகம் வெறும் கல்லும் மண்ணு மாகத்தான் இருந்திருக்கும் என்று மார்க்ஸ் கூறினார்.” என்று விவ ரித்தார்.
இன்றைக்கு இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள், பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து மிகத் தெளிவான நூலை எழுதியுள்ளார் பேராசிரியர் அன்பழகன். இந்த நூல் வெறும் பொருளாதார மாணவர்கள் மட்டும் படிக்க வேண்டிய நூல் அல்ல, சமூ கத்தில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்றும் கூறினார்.
பேராசிரியர் மு. நாகநாதன்
திட்டக்குழு உறுப்பினர் பேரா.மு. நாகநாதன் நூலை பெற்றுக் கொண்டு பேசுகையில், கடந்த 75 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் அடைந்த வெற்றிகள் எல்லாம் கடந்த 10 ஆண்டு களில் ஒவ்வொன்றாக சிதைக்கப்பட்டு வருகின்றன. பொதுத்துறை குறித்து பலரும் தவறான கருத்துக ளை வெளியிடுகிறார்கள். பொதுத் துறை தோற்கவில்லை, அது அரசியல் காரணங்களுக்காக தோற்கடிக்கப் படுகிறது. பயோடெக் என்ற நிறுவனம் தடுப்பூசியை 750 ரூபாய்க்கு வழங்கி யது. அதை ஒன்றிய அரசு வாங்கி மாநில அரசுக்கு வழங்கியது. இது யாருடைய பணம், மக்களின் வரிப்பணம். தொற்று குறைந்த நிலையில் அதே நிறுவனம் தற்போது கூறுகிறது அந்த தடுப்பூசி யின் விலை 350 ரூபாய் என்று. நோய் தாக்கத்தில் கூட அந்த நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளதை பார்க்க முடிகிறது.
மார்க்ஸ் சொன்னது என்ன?
பொது நிதியில் தான் அனைத்து அரசுகளும் இயங்கிக் கொண்டிருக் கின்றன. அந்த பொது நிதி எப்படி யெல்லாம் முதலாளித்துவத்தில் சிதைக்கப்படும் என்பதை மார்க்ஸ் 1853ஆம் ஆண்டே ஒரு கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார். வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது காலனி ஆதிக்கம்தான் என்றும், உலகின் 50 விழுக்காடு மக்களின் மொத்த செல்வத்தை 26 பணக் காரர்கள் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துள்ளார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கூறுகிறார். அப்படித்தான் இந்திய பொருளாதாரமும் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ளார்கள்.எனவே பொருளாதார பிரச்சனைகளை பொது விவாதப் பொருளாக மாற்றினால் தான் இலங்கையைப் போல் நெருக்க டிக்குள் சிக்காமல் மீள முடியும் என்றார். நிகழ்ச்சிக்கு மாநிலக் கல்லூரி முதல்வர் இரா.இராமன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் கி.மாலதி வர வேற்றார். நூலாசிரியர் பேராசிரியர் பு.அன்பழகன் ஏற்புரை வழங்கினார். க.நாகராஜன் (பாரதி புத்தகாலயம்) நன்றி கூறினார்.