சென்னை,டிச.3- “கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள் ளிட்ட 4 லட்சத்து 39 ஆயி ரத்து 315 நபர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும்” என்று முதல் வர் ஸ்டாலின் அறிவித்தார். சென்னை கலைவா ணர் அரங்கில் சனிக்கிழமை யன்று (டிச.3) உலக மாற் றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் பங் கேற்று நலத்திட்டங்களை வழங்கி உரையாற்றிய முதல் வர் மு.க. ஸ்டாலின், “ பிறவி யில் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் - பின்னர் ஏற் பட்ட குறைபாடாக இருந்தா லும் - விபத்தின் காரணமாக ஏற்பட்ட நிலையில் இருந்தா லும் - பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவர்களை சிறப்புக் கவனம் செலுத்திக் கவ னிக்க வேண்டும். அவர்களது உடல் குறைபாடானது, ஆனால் உள்ளக் குறைபாடு அல்ல, அறிவுக்குறைபாடு அல்ல, திறன் குறைபாடு அல்ல என்பதை அனை வரும் உணர்ந்து அவர்களை நாம் மதித்தாக வேண்டும்” என்றார். வருவாய்த் துறை மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் 1000 ரூபாயிலி ருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ஆம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம், அரசுக்கு ஆண் டுக்கு 263 கோடியே 58 லட்சம் ரூபாய் கூடுதல் செல வாகும் என்றும் தெரிவித் தார். (வரவேற்பு -3)