tamilnadu

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை  வழங்க ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, மே 24- கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை யில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கரும்பு விவசாயிகள் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொ துத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. சிறப்பு ஊக்கத்தொகை  2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைக ளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிக ளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்து, இத்திட்டத்தை செயல் படுத்த ரூ.297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விலை உயர்வு தமிழ்நாடு முதலமைச்சரின் தலை மையிலான அரசு பொறுப்பேற்றவுடன், ஒன்றிய அரசு நிர்ணயம் செய்த கரும்பு  விலைக்கு மேல் சிறப்பு ஊக்கத்தொகை யாக 2020-21 அரவைப் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50, 2021-22 மற்றும் 2022-23 அரவைப் பருவங்களு க்கு ரூ.195, 2023-24 அரவைப் பருவத்தி ற்கு ரூ.215, 2024-25 அரவைப் பருவத்தி ற்கு ரூ.349 என வழங்கி கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750-இல் இருந்து ரூ.3,500 என உயர்த்தப்பட்டுள்ளது. பயனாளிகள்  கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2024-25 அரவைப் பருவத்திற்கு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. நிதி விநியோகம் எட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைக ளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.