சென்னை, ஜூன் 26 சென்னையில் போதைப் பொருட்கள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 1,215 கிலோ கஞ்சா, மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப் பொருட்கள் நீதிமன்ற ஆணையின்பேரில் எரித்து அழிக்கப்பட்டன. அதன்பேரில், திங்களன்று (ஜூன் 26)) காலை, செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் கிராமத்தில் ஆபத்தான ரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில், சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் சங்கர் ஜிவால், முன்னி லையில், நீதிமன்றங்களின் ஆணை களின் படி மொத்தம் 125 வழக்கு களில் கைப்பற்றப்பட்ட 1213 கிலோ 685 கிராம் கஞ்சா, 1.25 கிலோ மெத்தம்பெட்டமைன், மற்றும் 40 கிராம் ஹெராயின் என மொத்தம் 1,215 கிலோ போதைப்பொருட்கள், சிறப்பு குழுவினர் மூலம் ஆய்வு செய்து எடை சரிபார்க்கப்பட்டு, 1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் எரிக்கப்பட்டு அழிக்கப் பட்டன. அழிக்கப்பட்ட போதை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். சென்னை பெருநகர காவல் துறையினரால் கடந்த ஒரு வருடத் தில் 3 முறை ரூ.4.5 கோடி மதிப்புள்ள மொத்தம் 3,135 கிலோ போதை பொருட்கள் எரித்து அழிக்கப் பட்டுள்ளன. தமிழகத்திலே அதிகளவில் போதைப்பொருட் களை அழித்ததில் சென்னை பெருநகர காவல் துறை முன்னோடி யாக உள்ளது” என தெரிவிக்கப் பட்டுள்ளது.