tamilnadu

img

மகளிர் உரிமைத் தொகை : 1.06 கோடிப் பேர் தகுதி

‘அரசுக்கும் வங்கிகளுக்கும், வங்கிகளுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பு சீராக அமைந்து வருகிறதா என்பதை மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும்.’

சென்னை, செப். 11 - “மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்துகொள்ள 1 கோடியே 63  லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு  வந்துள்ளன. இதில், தகுதியுள்ளவர்கள் என அரசு  தேர்ந்தெடுத்திருப்பது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், உரிமைத் தொகைத் திட்டத் திற்கு தேர்ந்தெடுக்கப்படாத மக ளிர்க்கு, அவர்கள் கோரிக்கை ஏன்  ஏற்கப்படவில்லை என்பதை அதிகாரி கள் முறைப்படி தெரிவித்தாக வேண்டும்” என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் திங்க ளன்று (செப்டம்பர் 11) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயி லாக கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசியிருப்பதாவது: “கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட த்தின் தொடக்க விழாவானது செப்டம் பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களி லும் அமைச்சர்கள் முன்னிலையிலும் இவ்விழா நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரி மைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனை வருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். ஏடிஎம் கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப் பட வேண்டும். ஆனால், ஏடிஎம் கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்கா மல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக் கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்ப தில் எந்த சிக்கலும் ஏற்படக்கூடாது,  அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல், செப்டம்பர் 15 அன்று, முதல்வரான என்னுடைய சார்பில் மக ளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரி விக்க வேண்டிய Toll-Free எண் ணும் சேர்க்கப்பட வேண்டும். இந்த  திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ள வர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லி யாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும். அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள். சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம், மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும்.

மாவட்டத் தலைநகரங்களில் விழா

செப்டம்பர் 15 அன்று மாவட்டத் தலைநகரங்களில் இதற்கான விழா  நடக்க இருக்கிறது. பணம் கிடைத்த வர்கள் மகிழ்ச்சியாக வருவார்கள். பணம் கிடைக்காத மகளிர் யாராவது அந்த இடத்துக்கு வந்து கேட்டால், பதில் சொல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தனியாக இதற்கென அலு வலர்களை உட்கார வைத்து, இப்படி கேட்க வரும் மகளிரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, ‘நாங்கள் பரி சீலிக்கிறோம்’ என்பதைச் சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். இது மிக மிக முக்கியமாகும். இதைச் செய்யா விட்டால், ஏதாவது ஒரு இடத்தில் பிரச்சனை என்றாலும், அது மாநிலம் முழுவதும் பெரிய செய்தியாக மாறி விடும். அதனால் கவனமாக இருக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர்கள் அனை வருக்கும், இந்த திட்டத்தை தொடர்ந்து  கண்காணிக்குமாறு தலைமைச் செய லாளர் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கும் வங்கிகளுக்கும், வங்கிகளுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பு சீராக  அமைந்து வருகிறதா என்பதை மாதந் தோறும் கண்காணிக்க வேண்டும். மாதத்தில் முதல் ஒருவார காலம் இந்த  திட்டத்துக்காக தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யும் மாபெரும் திட்டம் இது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம் தோறும் பயன டையும் திட்டம் இது.

எனவே, இத்திட்டம் குறித்து தொடர்ந்து நாம் மக்களிடம் எடுத்துச்சொல்லி வர வேண்டும். மகளிருக்கு கட்டணமில்லா விடியல்  பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவியருக்கு 1000 ரூபாய், இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டம், மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் திட்டம் ஆகிய 5 திட்டங்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டே இருக்கவேண்டும்.  எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அத னை முறையாகச் செயல்படுத்தினாலே, அதனால் பயனடைந்தவர்கள் மிகப் பெரிய அளவுக்கு நம்மைப் பாராட்டி  பேசுவார்கள். அத்தகைய பாராட்டு களை மட்டுமே பெற்றுத்தரும் திட்டமாக  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.” இவ்வாறு முதல்வர் பேசினார். கூட்டத்தில், தலைமைச் செயலா ளர் ஷிவ் தாஸ் மீனா, முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், சிறப்பு திட்ட செய லாக்கத் துறை செயலாளர் தரேஸ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்புப் பணி அலுவலர் இளம்பக வத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.