சீர்காழி, ஜன.22 - பாரதிய ஜனதா கட்சியின் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வரும் ஆனந்தராஜ் (35) கேலக்ஜி டிராவல் ஏஜென்சி எனும் நிறுவனத்தை வைத்து நடத்தி வருபவர். இந்நிறுவனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி, சேப்பாக்கம், அத்தியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 98 பேரிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீதம் வரை பணம் வசூல் செய்துள்ளார். 3 மாதத்தில் அனைவரையும் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், இல்லை யென்றால் பணத்தை திருப்பி அளிப்ப தாகவும் பணம் பெற்றவர்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக வெளிநாட்டிற்கும் அனுப்பாமல் கட்டிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும், பணத்தை திருப்பி கேட்டு வந்தவர்களுக்கு பாஜக பிரமுகர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (42) என்பவர் தலைமையில் 60-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை தனி பேருந்தில் வந்து கொள்ளிடம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.