tamilnadu

img

ரூ.139 கோடி முறைகேடு வழக்கு லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறை

ராஞ்சி, பிப்.21-  தோரந்தோ கருவூலத்தில் இருந்து ரூ.139 கோடி முறைகேடு செய்த வழக்கில் குற்றவாளியான பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் முதல்வராக இருந்த போது கால்நடைகளுக்காக தீவனம் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லாலு மீது 5 வழக்குகள் தொடரப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தியது.  இதில், 4 ஊழல் வழக்கிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்குகளில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைபாடு காரணமாக ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், தோரந்தோ கருவூலத்தில் இருந்து ரூ.139 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்தாண்டு பிப்ரவரி முதல் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 21-இல் வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.  இந்நிலை யில், தோரந்தோ கருவூலத்தில் இருந்து ரூ.139 கோடி முறைகேடு செய்த வழக்கில் குற்றவாளி லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.60 லட்சம் அபராதம் விதித்து திங்களன்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு நாடு, ஒரே மொழி, ஒரே சித்தாந்தம் எனும் போரை  நடத்துகிறது பாஜக என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி யுள்ளார். ‘‘மக்கள் மத்தியில் யார் இடம் பெறவேண்டும் என்பதை மாநிலங்களே தீர்மானிக்க வேண்டும். மாநில ங்கள் தான் தீர்மானிக்கும் என்பதை தேர்தல் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும்’’ என அவர் கூறியுள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் குற்றம்சாட்டப் பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் உத்தரவுக்கு எதிராக, உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.