tamilnadu

img

புதுக்கோட்டையில் சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 13-  சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தையும் நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்காலமாக ஏற்று அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலைப் பணியாளர்கள், கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ. கருப்பையா தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்கள் இரா. முத்துவடிவேல், சு. அய்யப்பன், ஆ. நடேசன், இணைச் செயலர்கள் சோனைமுத்து, வி. சரவணன், வி. மலையப்பன், வீ. கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் சி. திரவியம், மாவட்டச் செயலாளர் சு. கண்ணன், மாவட்டப் பொருளாளர் மு. பிரேம்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். ரெங்கசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது. உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.