tamilnadu

img

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி வேலைநிறுத்தம்

நாமக்கல், டிச.3- மோட்டார் தொழிலை முற்றிலும் முடக்கம் செய்யக்கூடிய புதிய சட் டத்தை நாடு முழுவதும் திரும்பப்பெற வலியுறுத்தி ஜனவரி மாதத்தில் மாநி லம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்  டம் நடைபெற உள்ளது என தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன (சிஐடியு)  மாநில நிர்வாகி கள் கூட்டம், சிஐடியு நாமக்கல் மாவட்  டக்குழு அலுவலகத்தில் சனியன்று,  மாநிலத் தலைவர் ஏ.ஆறுமுக நயி னார் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில பொதுச்செயலாளர் வி. குப்புசாமி, மாநிலப் பொருளாளர் பார்த்தசாரதி, மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், நாமக்கல்  மாவட்டச் செயலாளர் பி.சுரேஷ், மாவட் டத் தலைவர் வீ. பழனிவேல், மாவட்ட  பொருளாளர் பி.காளியப்பன் ஆகி யோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு  கொண்டு வந்த மோட்டார் வாகன புதிய  சட்டத்தை, தமிழகத்தில் அமல்படுத்தி யதை திரும்பப்பெற வேண்டும்.

மோட்  டார் வாகனம் சம்பந்தமான அனைத்து  அரசு விஷயங்களுக்கும், தனியார் மையம் என்ற திட்டத்தை ஒன்றிய அரசு  கொண்டு வருவதை கைவிட வேண்டும். சுங்கச்சாவடி என்ற பெயரில் பெரும்  கட்டணக் கொள்ளை நடத்துவதை கைவிட வேண்டும். இருசக்கர வாகனம்  உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் என்ற பெயரால் கடுமையாக அபராத கட்டணம் விதிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். ஆன்லைன் மூலம்  அபராதம் விதிப்பதை கைவிட வேண்  டும். காலாவதியான சுங்கச்சாவடி களை இழுத்து மூட வேண்டும். மோட்  டார் வாகனங்கள் ஓட்டும் தொழிலா ளர்களுக்கு தமிழக அரசு நலவாரியம் மூலம் மானியம் அளித்து இலவசமாக வீடுகள் கட்டித்தர வேண்டும். கொரோனா காலத்தில் மோட்டார் வாகன தொழில் கடுமையாக முடங்கி, ஏராளமான உரிமையாளர்கள் தற்  கொலை செய்துள்ளனர். ஆகவே,  தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும், மோட்டார்  தொழிலை முற்றிலும் முடக்கம் செய்யக் கூடிய புதிய சட்டத்தை நாடு முழு வதும் திரும்பப்பெற வலியுறுத்தி ஜன வரி மாதத்தில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.