tamilnadu

img

10 மடங்கு அபராதக் கட்டணம் வசூலிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிடுக!

சென்னை, நவ. 13 - 10 மடங்கிற்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கும் ஒன்றிய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்று அகில இந்திய சாலைப்போக்குவரத்து சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. சம்மேளன நிர்வாகிகள் மற்றும் செயற்குழு கூட்டம் நவ.12-13 தேதி களில் சென்னையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு செயல் தலை வர் கே. கே. திவாகரன் தலைமை தாங்கி னார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் தொடங்கி வைத்து பேசினார். பிரச்சார இயக்கம் மோட்டார் வாகன சட்டத்தை கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. இதனால் அரசு போக்குவரத்து நிறு வனங்கள் சீர்குலையும். மோட்டார் தொழிலை முற்றிலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஒப்படைக்கும் சட்ட திருத்தம் மற்றும் கொள்கைகளை கைவிட வேண்டும். மோட்டார் தொழி லாளர்களுக்கு நாடு தழுவிய அளவில்  சமூக பாதுகாப்புத் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும்.

செயலிகள் (ஆப்) அடிப்படையில் செயல்படும் ஓலா, உபேர் போன்ற நிறு வனங்கள் தொழிலாளர்களிடத்தில் அதித கமிஷன் பெறுகின்றன; பொது  மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூ லிப்பது போன்ற சட்ட விரோத நட வடிக்கைகளில் ஈடுபடுகின்றன. ஒன்றிய அரசும், மாநில அரசும் இதனை முறைப் படுத்த வேண்டும். இவற்றை வலி யுறுத்தி பிப்ரவரி மாதம் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெறும். மார்ச் மாதம் டெல்லியில் தொழி லாளர்கள், விவசாய சங்கங்கள் இணைந்து நடத்தும் பேரணியில் பல்லா யிரக்கணக்கான மோட்டார் தொழி லாளர்கள் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சம்மேளன பொதுச் செயலாளர் லட்சும்மையா, பொருளாளர் ஹரிகிருஷ்ணன, தமிழ கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அ. சவுந்த ரராஜன் கே. ஆறுமுக நயினார், வி.குப்பு சாமி, சிவாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.