tamilnadu

உலகச் செய்திகள்

எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் மூலமாக 2021ல் கிடைத்த வருமானம் 630 கோடி அமெரிக்க டாலர் என்று சூயஸ் கால்வாய் நிர்வாகத் தலைவர் ஒசாமா ரேபி தெரிவித்துள்ளார். சூயஸ் கால்வாய் வரலாற்றில் இதுதான் அதிகமான வருமானம் ஈட்டிய ஆண்டு என்ப தோடு, முதன்முறையாக 127 கோடி டன் சரக்குகளை இந்தக் கால்வாய் கையாண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் 117 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் முடிவை பிரிட்டன் எடுத்ததால் புதிய சுங்கத்துறை விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. இந்தப் புதிய விதிகளால் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையை பிரிட்டன் சந்திக்க நேரலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. புதிய விதிகள் என்பது பிரிட்டனுக்கு பொருட்க ளை அனுப்பும் பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஐரோப்பிய யூனியனி லிருந்து பிரிட்டன் வெளியேறியதால் பழைய சலுகைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் தொடர்ந்து அரசியல் ரீதியாக நிலையற்ற தன்மை நிலவுவதால் பதவி விலகுவதாக சூடான் நாட்டின் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் அறி வித்துள்ளார். அரசியல் சக்திகளுக்கிடையே கடுமை யான வேறுபாடுகள் நிலவுவதை சுட்டிக்காட்டியுள்ள அவர். ஒரு பரந்துபட்ட விவாதம்தான் தற்போது நிலவி வரும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வினைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் பதவியை ராணுவம் கைப்பற்றியுள்ளதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.