tamilnadu

img

வயதான காலத்தில் அலைக்கழிப்பதா?

சென்னை, மே 5- வயதான காலத்திலும் கடந்த 10 நாட்களாக போராடியும் எந்த தீர்வும் கிடைக்கவிலை என ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். அரசு போக்குவரத்து கழகத்தில் 2020க்குப் பின் விருப்ப ஓய்வு மற்றும்  பணியில் இறந்தவர்களின் பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு 10ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தலைவர் எஸ்.கிருஷ்ணன்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலா ளர் கே.கர்சன், பொருளாளர் ஏ.வர தராஜன் துணைப் பொதுச்செய லாளர்கள் பி.செல்வராஜன், ஆர்.தேவராஜ், கே.வீரராகவன், மாநில நிர்வாகிகள் ஜி.ராமச்சந்திரன், ஏ.ரை மண்ட், எம்.சந்திரன், சேதுராமன், சண்முகம், முத்துக்குமார் ஆகியோ ரும் பேசினார். அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில  நிர்வாகி ராமசாமி வாழ்த்திப் பேசினர். இதில் மாநிலம் முழுவதி லும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணன், பொதுச் செயலா ளர் கே.கர்சன் ஆகியோர் கூறியதா வது:-

கடந்த 2015ஆம் ஆண்டு முதல்  வழங்க வேண்டிய 77 மாத அகவிலைப் படி உயர்வை உடனே நிலுவையுடன் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் பேசித்  தீர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கடந்த மாதம் 26ஆம் தேதி காத்திருப்பு போராட் டத்தை துவக்கினோம். 26ஆம் தேதி போக்குவரத்து துறை  அமைச்சர்  சிவரங்கனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அமைச்சர் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு முதல்வரிடம் கலந்து பேசி நல்ல முடிவை அறிவிப் பதாக தெரிவித்தார். ஆனால் இன்றைய (புதனன்று) மானியக் கோரி க்கையில் எந்த அறிவிப்பும் வெளி யிடாதது எங்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏறக்குறைய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக போராடியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அரசு எங்க ளுடைய போராட்டத்தின் நியாயத்தை உணராமல் மக்களுக்கான சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களை அலைக்கழிப்பது நியாயமல்ல. ஆயினும் வெயிலின் தாக்கத்தா லும் ஓய்வூதியர்களின் வயதைக் கணக்கில் கொண்டும் எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்கிறோம். அரசு போக்குவரத்து ஊழியர் சம்மே ளனத்தோடு போக்குவரத்து துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய போது சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். அப்போது எங்க ளது கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என நம்புகிறோம். அப்போதும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அடுத்தகட்டமாக சங்க நிர்வாகிகள் கூடி, ஊழியர் சம்மேளனத்தோடு கலந்து பேசி பொதுமக்களின் ஆதர வோடு சாலை மறியல், கோட்டை நோக்கி பேரணி உள்ளிட்ட போராட்டங் களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.