வேலையின்மைக் கொடுமையைக் கண்டித்தும், பெண்கள் மீதான வன்கொடுமை நிகழ்வுகளைக் கண்டித்தும் நாட்டின் சொத்துக்களை விற்று பணமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தைக் கண்டித்தும் சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
35 சதவீத பட்டதாரிப் பெண்கள் வேலையின்றி தவிக்கும் அவலம்
சென்ற மாநாட்டுக்குப்பின் கடந்த நான் காண்டுகளில் வேலையின்மை மிகவும் கூர்மையாக அதிகரித்திருக்கிறது. மக்கள்தொகையின் பெரும்பாலானவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அம்சங்கம் எதுவும் இல்லாத நிலை யில் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார மந்தத்தா லும், ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவற்றாலும் முறைசாராத் தொழில்களிலும் வேலையின்மை கடு மையாக உயர்ந்திருக்கிறது. 2011-12இல் 2.2 சதவீதமாக இருந்த வேலை யின்மை விகிதம் 2017-18இல் 6.1 சதவீதமாக உயர்ந்தி ருக்கிறது என்று அரசின் சார்பில் வழக்கமாகக் குறிப்பி டும் வேலையின்மை விகிதம் கூறுகிறது. ஒன்றிய அரசாங்கம் கொரோனா பெருந் தொற்றைக் கையாண்ட விதமும், அது பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கையும் மற்றும் கொரோ னா காலத்தில் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு ரொக்கம் மற்றும் உணவு தானியங்கள் அளிக்க மறுத்ததும் வேலையின்மைக் கொடுமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது.
2020-21இல். 20 வயதுக்கும் 24 வயதுக்கும் இடை யேயான இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் 39 சதவீதமாகவும், 25 வயதுக்கும் 29 வயதுக்கும் இடையேயுள்ளவர்கள் மத்தியில் 13 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது. +2 வரை படித்தவர்களில் வேலையில்லாதோர் 10 சதவீதத்திற்கும் அதிகமானவர்களாகவும், பட்டப் படிப்பு படித்தவர்கள் 20.4 சதவீதத்திற்கும் அதிகமா னவர்களாகவும் இருக்கிறார்கள். சுமார் 35 சதவீதப் பட்டதாரிப் பெண்கள் வேலையில்லாமல் இருக்கி றார்கள். ஒன்றிய அரசு, மாநிலஅரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாகியுள்ள பணியி டங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்தப் பணி யிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் என்று மாநாடு கோருகிறது.
அதேபோன்று மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் ஆண்டு ஒன்றுக்கு 200 நாட்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்றும் இதேபோன்று நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் மாநாடு கோருகிறது. அரசாங்கம் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவினங்களை அதிகப்படுத்தி வேலை வாய்ப்பைப் பெருக்கிட வேண்டும். நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப் படுத்த வேண்டும் என்றும், அனைவருக்கும் நாகரிக மான வேலை மற்றும் ஊதியத்திற்கான போராட்டத்தை யும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாநாடு அறை கூவல் விடுக்கிறது. இவ்வாறு வேலையின்மைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவு கும்பல்!
நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் நாளும் அதிகரித்துக்கொண்டு வருவதற்கு தன் ஆழ்ந்த கவலையை மாநாடு வெளிப்படுத்துகிறது. அரசமைப்புச்சட்டத்திற்கு அப்பால் ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் பல சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு இவ்வாறு பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுகின்றன. தங்க ளுக்கு அரசாங்கத்தால் தண்டனை எதுவும் விதிக்கப் படமாட்டாது என்கிற தைரியத்துடன் கொலைகளைச் செய்கின்றனர், கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். இத்தகைய மதவெறியர்கள் 8 மாத குழந்தை யைக்கூட விட்டுவைக்காமல் கொடூரமான முறையில் தாக்கி இருக்கின்றனர். போலீசாரின் பதிவேடுகளின் படி தில்லியில் ஒவ்வொரு மாதமும் சராசரி ஏழு வழக்குகள் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படு கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தி ருப்பதற்கு எதிராக மக்களைத் திரட்டி இத்தகைய அநீதிக்கு எதிராகவும், பெண்களுக்கு சமத்துவம் அளிப்பதற்காகவும் போராட வேண்டும் என்று மாநாடு தீர்மானிக்கிறது.
நாட்டின் சொத்துக்களை விற்று பணமாக்கும் திட்டத்திற்கு மக்களை அணி திரட்டுக!
ஒன்றிய மோடி அரசாங்கம், நாட்டின் சொத்துக் களை விற்று சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் பணமாக்கத் திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம் நாட்டில் லாபம் ஈட்டிவரும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாரிடம் அடிமாட்டு விலைக்கு அளித்திடத் திட்டமிட்டுள்ளது. ஆட்சியாளர்களுடன் கள்ளப்பிணைப்பு வைத்துள்ள கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் சொத்துக்களைத் தாரை வார்த்திடத் திட்டமிட்டுள்ளது. இது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். வேலையின்மையை மேலும் மோசமாக்கிடும்.
நாட்டிலுள்ள 400 ரயில்நிலையங்கள், 90 பாசஞ்சர் ரயில்கள், 1400 கிலோ மீட்டர் ரயில்வே தடயம், 741 கிமீ கொங்கன் ரயில்வே,. 15 ரயில்வே ஸ்டேடி யங்கள், மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ரயில்வே காலனி கள், 265 ரயில்வே குட்ஷெட்டுகள், 4 மலை ரயில் பாதை கள் என அனைத்தையும் வெறும் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு தானம் செய்திட முடிவு செய்துள்ளது. இதேபோன்றே விமான நிலையங்களையும், உண வுக் கார்ப்பரேஷன் கிடங்குகளையும் கூட தானம் செய்ய முடிவு செய்துள்ளது. நாட்டின் சொத்துக்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்திற்கு எதிராக நாட்டு மக்களை அணி திரட்டிப் போராட வேண்டும் என்று மாநாடு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு நாட்டின் சொத்துக்களை பணமாக்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் நிறைவேற்றப்படக்கூடாது என்று மாநாடு பிரகடனம் செய்கிறது. இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
(ந.நி.)