tamilnadu

img

மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரிக்க கோரிக்கை

மாநில நெடுஞ்சாலைகளை  தமிழக அரசே பராமரிக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 31-  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க லால்குடி, மண்ணச்சநல்லூர் உட்கோட்ட 9 ஆவது மாநாடு வியாழனன்று திருச்சியில் சங்க கட்டடத்தில் நடந்தது.  மாநாட்டிற்கு, சங்க உட்கோட்டத் தலைவர் போஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைஞர் வரவேற்றார். வேலை அறிக்கையை உட்கோட்டச் செயலாளர் ரமேஷ் வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை உட்கோட்ட பொருளாளர் அன்பழகன் சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி துவக்கவுரையாற்றினார்.  சங்க மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், மாவட்ட துணைத்தலைவர் மலர்மன்னன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலையை தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநிலத் துணைத்தலைவர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் உட்கோட்ட துணைத்தலைவர்கள் கரிகாலன், சவரிமுத்து, ஆரியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  உட்கோட்ட இணைச் செயலாளர் சேகர் நன்றி கூறினார்.