நெல்லை, பிப்.26- நெல்லையிலிருந்து அம்பை, பாவூர் சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழி யாக சென்னைக்கு பொங்கலையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலில் சுமார் 1,241 பயணிகள் பயணம் செய்தனர். அந்த ரயிலுக்கான வருமானம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து பாவூர் சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆர்.டி.ஐ.யில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தென்னக ரயில்வே அளித்த பதிலில், மொத்த வருமானமாக ரூ.5,98,873 கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாண்டியராஜா கூறுகை யில், மதுரை ரயில்வே கோட்டத்தில் சென்னைக்கு ரயில்கள் இல்லாத ஒரே வழித்தடமான அம்பை, கடையம், பாவூர்சத்திரம் வழியாக சென்னைக்கு ரெயில்கள் வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாவூர்சத்திரம், அம்பை சுற்றுவட்டார மக்கள் ரூ.1,500 வரை பேருந்துகளுக்கு கொடுத்து பயணம் செய்ய வேண்டிய கட்டா யம் உள்ளது. எனவே தீபாவளி, பொங்க லுக்கு சிறப்பு ரயில் இயக்கியதை போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த ரயிலை நிரந்தரமாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.